Thursday 23 February 2017

பன்றி காய்ச்சல் நோய் (H1N1) (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன? ஸ்வைன் நோய் நமக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?


பன்றி காய்ச்சல் நோய் 

(ஸ்வைன் இன்ப்ளூயென்ஸா

H1N1 Flu Virus (Swine Flu)






பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன?
 H1N1(எச்1.என்1)க்காய்ச்சல் அல்லது பன்றிக்காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த  தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும் என்பது Orthomyxoviridae ல் ( Hemagglutinin மற்றும்  Neuraminidase). அடங்கி இருப்பதால் இதனை  சுருக்கமாக  H மற்றும் N குறிப்பிடபடுகிறது


INFLUENZA 

 இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது
TYPES OF INFLUENZA 
 இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள்

இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்கியது. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இத்தீநுண்மம் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதர்களுக்கு பரவுகிறது.
TRANSFORMATION OF INFLUENZA 


பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது  'ஏ' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால்  பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின்  பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம் மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது.

SPANISH INFLUENZA-1918

1918 ஆம் ஆண்டில் இது ஸ்பானிஷ் காய்ச்சல் என பிரபலமடைந்து இருந்த இது 2009-ம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத ஆரம்ப கால கட்டத்தில், தெற்கு கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ்க்கு அருகில் உள்ள சேன் ஆன்டோனியோ ஆகிய இடங்களில் ‘A’ ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா  (H1N1) வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை அளிப்பது முதன்முதலில் அறியப்பட்டது.அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டது. பின்னர் உலக அளவிலும் இது கண்டறியப்பட்டது

 

74 நாடுகளில் இந்நோயினால் 30,000 பேர் பாதிக்கப்பட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
மனிதனிடம் பன்றி காய்ச்சல் உள்ளதைக் காட்டும் அறிகுறிகள் என்ன?
SYMPTOMS OF H1N1
மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன்தான் ஸ்வைன் ப்ளூ நோயும் வரும். வைரஸ் உடலில் பரவியதும்
சளி,
காய்ச்சல்,
தொண்டைவலி,
சோர்வு,
உடல் வலி,
குளிர் போன்றவையும் வரும்.
சிலருக்கு வாந்தி மற்றும்  வயிற்று போக்கும் ஏற்படக்கூடும்.
கடந்த காலங்களில் இந்நோய்வாய்ப்பட்டவர்களிடம் கடுமையான அளவில் உடல்நிலை பாதிப்பும் (நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு) உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப் போலவே,  ஏற்கனவே இருக்கும் நோய்களையும் வலிகளையும் இந்நோயும் தீவிரப்படுத்தும்..
இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.
நோய் தாக்கியவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது எப்படி பரவும்?
இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம் நாளுக்குள் மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும். அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும், நோயில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுதும் இந்நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்.
நோய் நமக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முதல் மற்றும் முக்கிய செயல்: உங்களின் கைகளைக் கழுவுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும். நன்றாக தூங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும். மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாகக் கையாளுங்கள். அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள். இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்.
ஸ்வைன் நோய் நமக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஸ்வைன் நோய் வராமல் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. இன்ப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகள் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாளும் சில செயல்முறைகளைக் கடைபிடித்தல் அவசியம்.
ஸ்வைன் நோய் வராமல் தடுத்து
  ஆரோக்கிய வாழ்வு வாழ.....
·         இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும்.
·         தும்மல் மற்றும் இருமலுக்கு பின் சோப் & தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும்.ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளை சுத்தப்படுத்துதலும் நல்லது.



·         கண்கள், வாய், மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.
·         இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்
·         உங்களுக்கு இன்ப்ளூயன்ஸா நோய் இருந்தால், தயவு செய்து வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.
இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த வழி என்ன?

                           
உங்களுக்கு இந்நோய்  இருந்தால், முடிந்த அளவிற்கு பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும் . வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் வைத்து மூடிக்கொள்ளவும்.
இது உங்களைச் சுற்றி உள்ளவருக்கு இந்நோய் தாக்காமல் இருக்க உதவும்.பயன்படுத்திய திசுத்தாளை குப்பைக்கூடையில் போடவும். திசுத்தாள் இல்லை என்றால், இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் கைக்குட்டை அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ளவும். பிறகு, கைகளை நன்கு கழுவவும். ஒவ்வொருமுறையும் இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கைகளைக் கழுவவும்.
நோய் வராமல் தடுக்க கைகளைக் கழுவி சுத்தப்படுத்த சிறந்த முறை என்ன?




அடிக்கடி கை கழுவுதல் கிருமிகளிடம் இருந்து உங்களைக் காக்கும். சோப் & தண்ணீர்  அல்லது ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளைக் கழுவவும். சோப் & சுடு தண்ணீர் கொண்டு கழுவும்பொழுது 15 முதல் 20 நொடிகளுக்கு கழுவவும். சோப் & தண்ணீர்  இல்லாத பொழுது, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்போசபல் கையுறைகள் (ஒரு முறை மட்டும் பயன்படுத்திக்கொண்டு எறிந்து விட வேண்டும்) அல்லது ஜெல் வகை அழுக்கு நீக்கிகளைப் பயன்படுத்தலாம். இவைகள் மருந்து கடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஜெல்லைப் பயன்படுத்தினால் ஜெல் முற்றிலும்  காய்ந்து கைகள் ஈரமின்றி இருக்கும்படி கைகளை நன்றாக உரசித்தேய்க்கவும்.ஜெல்லைப் பயன்படுத்திடும் பொழுது தண்ணீர் தேவையே இல்லை. ஜெல்லில் உள்ள மருந்து பொருட்களே கைகளில் உள்ள கிருமிகளைக் கொன்றுவிடும்.


உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் இருப்பதாகவும் உணர்ந்தால், உடனடி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவும்.



குழந்தைகளாக இருப்பின்....

·         வேகமாக சுவாசித்தல் (இளைப்பு )அல்லது சுவாசிக்க சிரமப்படுதல்.
·         தோல்களில் நீல நிறம் கலந்த தோற்றம்.
·         அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்
·        பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல்.
·  குழந்தைகளைத் தூக்கும் பொழுதும் கட்டி அணைக்கும் பொழுதும் அசெளகரியத்தையும் எரிச்சலையும் காட்டுவார்கள்.
·  ப்ளூ வருவதற்கான அறிகுறிகள் அதிகரிக்கும் ஆனால் காய்ச்சல் மற்றும் மோசமான சளி, இருமலுடன் நின்றுவிடும்.
·         தோலில் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய காய்ச்சல்



பெரியவர்களுக்கு.........

·         சுவாசிக்க சிரமப்படுதல் அல்லது மூச்சுத்திணறல்
·         மார்பு அல்லது வயிறு பகுதிகளில் வலி அல்லது அழுத்தமான உணர்வு
·         தீடீர் மயக்கம்.
·         தடுமாற்றம்.
·         கடுமையான அல்லது தொடர்ந்த வாந்தி
H1N1 வைரஸ் பொது அறிகுறிகள் மற்றும் தற்காப்பு செயல்பாடுகள்
H1N1 வைரஸ் உலக மக்கள் சமுதாயத்திடையே மிகுந்த பீதியை கிளப்பிவிட்டது. இந்த உயிர்க்கொல்லி நோயின் அறிகுறிகள் சாதாரண சளிக்காய்ச்சல் அறிகுறிகளையே ஒத்திருக்கின்றன. கிழ்க்குறிப்பிட்டுள்ள சுலபமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்..


H1N1 காய்ச்சல் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்


· சாதாரண சளி காய்ச்சல் போல் அல்லாது அதிக அளவு காய்ச்சல் – 
சில நோயாளிகளிடம் இந்த அறிகுறி இல்லாமலும் இருக்கலாம்.
·         வறட்டு இருமல்
·         மூக்கு அடைப்பு (அ) ஒழுகுதல்
·         தொண்டை புண்
·         உடல் வலி
·         குளிர் நடுக்கம்
·         வழக்கத்திற்கு மாறான அதிகளவு களைப்பு
·         குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு
· முற்றிய பன்றிக்காய்ச்சலால் நிமோனியா மற்றும் நுரையீரல் செயலிழத்தல் ஏற்படலாம்.
H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
உலகெங்கும் பரவிய உயிர்கொல்லி நோயான பன்றிக்காய்ச்சல் இந்திய மன்னில் வந்தடைந்து பல உயிர்களை குடித்திருக்கிறது. இந்த நோய் வருமுன் காப்பதற்கு சில விதிமுறைகளை பின்பற்றுதல் போதுமானது. படி அளவு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் மரக்கால் அளவிற்கு நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து ஆலோசனைகளைப் பின்பற்றி பன்றிக் காய்ச்சல் தொற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
·         உங்களுக்கு H1N1 வைரஸ் தாக்கியிருப்பதாக உணர்ந்தால், கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களான பள்ளி மற்றும் அலுவலகம் செல்வதை தவிர்த்து உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்.
·         கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கிருமி நாசினி சோப்பு கொண்டு நன்றாக நுரைக்க சோப்பிட்டு (குறைந்தபட்சம் 15 நொடிகள்) ஓடும் தண்ணீரில் கழுவவும்.


·         இரவில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தூங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்.
·         தினமும் குறைந்தபட்சம் 8 அல்லது 10 டம்ளர் அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மேலும் அது வறட்சி ஏற்படாமல் குழிவுகளில் எச்சில்/சளி ஊற செய்யும்.
·         இருமல் மற்றும் தும்மல் வரும்போது மெல்லிய உறிஞ்சும் தன்மை கொண்ட காகிதத்தால் வாயை மூடிக்கொள்வதன் மூலம் வைரஸ் தொற்றுக் கிருமிகள் யாருக்கும் பரவாமல் தடுக்கலாம்.
·         கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை கைகளால் தொடுவதை தவிற்பதன் முலம் பரவுவதை தவிற்கலாம்.
·         பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ள (அ) பாதிக்கப்பட்ட நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு கவணித்தல் வேண்டும்.


·         உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் / உடலை வலிமையுடன் பேணவும் / முழுதாணியங்கள், பல்வகை வண்ணக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்களை உண்ணவும்.
·        

இத்தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்நோய்க்கு எதிரான வழிகாட்டிகள் அவ்வபோது பிரசுரிக்கப்படுகிறது. நோய் பற்றிய அவ்வபோது வெளிவரும் புதிய தகவல்களை தெரிந்துக்கொண்டு அதன்படி முறையாக செயல்படுதல் வேண்டும்

 

பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் கபசுரக் குடிநீர்


கபசுரக் குடிநீர் என்றால் என்ன.?

உலகில் தோன்றிய, தோன்றக் கூடிய அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவம் தீர்வு சொல்கிறது. தற்போது பரவிக்கொண்டிருக்கும் பல்வேறுவித காய்ச்சல்களுக்கு எளிய தீர்வு சித்த மருத்துவத்தில் உள்ளது. சித்த மருத்துவத்தில் 64 வகையாக சுரம் பிரிக்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் குறிப்பிடப்படும் சிக்குன் குன்யா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவற்றுக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தீர்வுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவியபோது நிலவேம்பு குடிநீர் மக்களுக்கு பாதுகாப்பு அளித்தது.

‘‘கபம் என்ற சொல் சளியையும், சுரம் என்ற சொல் காய்ச்சலையும் குறிக்கும். சிறு குழந்தை தொடங்கி, வயதானவர் வரை என அனைவரையும் எதுவும் செய்யவிடாமல், முடக்கிவிடும் தன்மை கொண்ட கபசுரத்தைக் குணப்படுத்த உதவும் மருந்து என்பதன் பொருள்தான் இந்த கபசுரக் குடிநீர்.நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை யும் போக்கும் திறன் கொண்டது..நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாகவும் கிடைக்கும். நிலவேம்பு கஷாயம் செய்வது போலவே கொதிக்க வைத்து சுண்டிய பிறகு வடிகட்டிக் குடிக்கலாம். குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும். பெரியவர்கள் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது’’ 

அறிகுறிகள் என்ன? சிகிச்சைகள் என்ன?


தற்போது பரவலாக பரவிவரும் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள், சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள கபசுரத்தின் அறிகுறிகளை ஒத்து உள்ளன. இடைவிடாத சுரம், மெய் குளிரல், உடல் வெதும்பல், இருமல், மார்பு நோதல், மேல் மூச்சு, மூச்சுத் திணறல், உடல் வலி, மிக்கபேதி, இருகண்களிலும் பீளை சேருதல், மனம் துவளல், தொண்டை நோதல், முகம், கை, கால் இவை வெளுத்தல், நாக்கு சுவையறியாமை ஆகியவை பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள்.
பன்றிக் காய்ச்சலான கபசுரத்தின் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் கபசுர குடிநீரை நாமே தயாரிக்கலாம். இதில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், நெல்லிவேர், கற்பூரவல்லி, நிலவேம்பு, சிறுதேக்கு, ஆடாதொடை, சிறுகாஞ்சொறிவேர், வட்டதிருப்பி வேர், சீந்தில் தண்டு, கடுக்காய்தோல், கோஷ்டம், கோரைக்கிழங்கு, அக்கரகாரம் ஆகிய 15 வகையான மூலிகை ஆடாதொடை இலை, சிறு தேக்கு, கரிசலாங்கண்ணி, சுக்கு, ஆடுதீண்டா பாலை வேர், பேராம்பல், மிளகு ஆகிய மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை பொடிசெய்து சமஅளவு சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

பன்றிக்காய்ச்சலை தடுக்க 'கபசுர' 

மூலிகைக் குடிநீர்:

நிலவேம்பு கஷாயத்தின் பெருமைகளை இப்போதுதான் பலரும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். 
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீரை தயாரித்து மக்களுக்கு வழங் கியதுபோல், தமிழக அரசும், மத்திய அரசும் மக்கள் நலன் கருதி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் தவும், ஆரம்ப சுகாதார நிலையங் களிலும், அரசு மருத்துவமனை களிலும் கபசுர குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thanks
Vikaspedia

கார்த்திகேயன்


Tuesday 14 February 2017

வரலாறு படைத்த இஸ்ரோ -104 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்து இஸ்ரோ உலக சாதனை

104 செயற்கைகோள்களுடன்   விண்ணில் பாய்ந்து

  இஸ்ரோ உலக சாதனை

இந்தியாவின் தொடரும் சாதனை


ஜனவரி கடைசி வாரத்தில் 83 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான 
திட்டம் தான் இருந்தன ஆனால் தற்போது கூடுதலாக 20 வெளிநாட்டு செயற்கைக்கோள்ககளும் இணைக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் வரிசையில் , அதன் முப்பத்து 
ஒன்பதாம்  விமானம் (பி.எஸ்.எல்.வி C37)714 கிலோ எடையுள்ள  
Cartosat 2 தொடர்  செயற்கைக்கோள்  புவி கூர்நோக்குக்காவும்  மற்றும் 664 கிலோ எடையுள்ள 103 இணை பயண செயற்கைக்கோள்கள் , பி.எஸ்.எல்.வி 'எக்ஸ்எல்' (PSLV-XL) கட்டமைப்பில் (with the use of solid strap-on motors). உருவாகும் பதினாறாம் விமானம், ஆகியவை , 
505 துருவ கி.மீ தூரம் உள்ள  சூரிய ஒத்திசைவு கோளப்பாதை 
( Sun Synchronous Orbit ) 
பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் மூலம் ஏழு நாடுகளை சேர்ந்த, 104 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (SDSC)   முதலாவது ஏவுதளத்தில் (FirstLaunchPad)  இருந்து இன்று காலை 9.28 மணிக்கு  
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


 பி.எஸ்.எல்.விC37(PSLVC37)பயன்படுத்தி  இணை பயண செயற்கைக்கோள்கள் 101 நானோ செயற்கைக்கோள்கள் உள்ளன இவை  இஸ்ரேல்கஜகஸ்தான்நெதர்லாந்துசுவிச்சர்லாந்து
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE),  மற்றும் 96 அமெரிக்கா (USA), 
இந்தியாவில் இருந்து இரண்டு நானோ செயற்கைக்கோள்கள் 
 செயற்கைக்கோள்களின் எடை 500-600 கிலோ
செயற்கைக்கோளின் தள்ளுசுமை (Payload) இருக்கும் 1350 கிலோவாக இருக்கும்
அனைத்து செயற்கைக்கோள்கள் மொத்த எடை சுமார் 1378 கிலோ 
ஆகும்.

  (ஐ.என்.எஸ்) (Isro Nano Satellites )

எஸ்.எல்.வி C37ல் இஸ்ரோ நானோ செயற்கைக்கோள்களான  (ஐ.என்.எஸ்) (Isro Nano Satellites )
ஐஎன்எஸ்-1A (INS-1A) மற்றும் ஐஎன்எஸ்-1B – பி (INS-1B) ஆகிய
இரண்டு இஸ்ரோ நானோ செயற்கைக்கோள்கள் செல்கிறது.
இஸ்ரோ நானோ செயற்கைகோள்களானது (ஐ.என்.எஸ்)
ஒரு பல்துறை தொகுதிகள் மற்றும்  நானோ செயற்கைக்கோள் பஸ் அமைப்பும் உள்ளது இது எதிர்கால அறிவியல் மற்றும் சோதனை தரவுகளுக்கும்   மேலும் . ஐஎன்எஸ் அமைப்பு பி.எஸ்.எல்.வி. பெரிய செயற்கைக்கோள்கள் உடன் ஒரு இணை பயண செயற்கைக்கோளாகவும் உருவாக்கப்பட்டுள்ளது பி.எஸ்.எல்.வி C37 இரண்டு இஸ்ரோ நானோ செயற்கைக்கோள்கள் (ஐஎன்எஸ்-1மற்றும் ஐஎன்எஸ்-1B), . 
INS 1A (ISRO NanoSatellite 1A)


INS 1B (ISRO NanoSatellite 1B)

இந்த
 இரண்டு செயற்கைக்கோள்கள் பல்வேறு சோதனைகள் நடத்த
விண்வெளி பயன்பாட்டு  மையம் (SpaceApplicationsCentre)  
மற்றும் இஸ்ரோவின் மின் ஒளியியல் அமைப்பு ஆய்வகம் 
 (Laboratory for Electro Optics Systems –LEOS) (LEOS- ஏற்கனவே சந்திரயான் -1.ல் பங்காற்றி இருக்கிறது)
ஆகியவற்றில்  இருந்து நான்கு வெவ்வேறு தரவுகளைப் ஏற்றி செல்கிறது.

101 சர்வதேச வாடிக்கையாளர் நானோ செயற்கைக்கோள்கள் வணிக ஏற்பாடுகளின்  ஒரு பகுதியை விண்வெளித் துறை ( Department of Space)  இந்தியா அரசு  நிறுவனத்தின் கீழ் Antrix கார்ப்பரேஷன் லிமிடெட் , இஸ்ரோ வணிக மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இடையே
ஒரு காரணியாக  செயல்படுகிறது
பி.எஸ்.எல்.வி C37ல் Cartosat-2  

Cartosat2 
Cartosat2 தொடர் செயற்கைக்கோளே பி.எஸ்.எல்.வி C37 ஏற்றி 
செல்லும்  முதன்மை செயற்கைக்கோள் ஆகும்.
 இந்த செயற்கைக்கோள் Cartosat2 தொடரின் முந்தைய நான்கு செயற்கைக்கோள்கள் ஒத்தது. பி.எஸ்.எல்.வி C37 மூலம் ஒரு 505 கி.மீ. 
போலார் சன் சின்க்ரோனஸ் ஆர்பிட்ல் (செலுத்திய பிறகு
தொலை உணர்கருவி Remote-Sensors) மூலம் செயல்பட்டு
செயற்கைக்கோள் வழக்கமான சேவைகள் வழங்கும் கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ள 3 கேமராக்கள் (Panchromatic and Multi-spectral cameras) பயன்படுத்தி பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும்
 Cartosat-பயன்பாடுகள் 
Cartosat-2 செயற்கைக்கோள் படங்களில் இருந்து சாலை கண்காணிப்புநீர் விநியோகம்நில பயன்பாட்டு வரைபட உருவாக்கங்கள்,பே வரைபட பயன்பாடுகள்,  
நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயன்பாடுகள்கடலோர நில பயன்பாடு மற்றும் கட்டுப்பாடு, புவியியல் மேலாண்மை மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் செயற்கை அம்சங்கள்களின் மாற்றம் கண்டறிதல் மற்றும் பல்வேறு நில தகவல் அமைப்பு (LIS)  மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (GIS) ஆகிய பயன்பாடுகள் வெளிகொண்டு வர பயனுள்ளதாக இருக்கும்

 இஸ்ரோவின் மற்றுமொரு மைல்கல்



ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம்,ரஷ்யாவின் விண்வெளி சாதனையொன்று முறியடிக்கப்பட்டது.
2014 ம் ஆண்டு ரஷ்யா ஒரே நேரத்தில் 37 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியது தான்சாதனையாக கருதப்படுகிறதுஇஸ்ரோ இதற்கு முன்பு ஒரே நேரத்தில்  20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது.
ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் 
செலுத்தியது இஸ்ரோ வரலாற்றில் இது முதல்முறை.

நன்றி 
கார்த்திகேயன்



Ads Inside Post