திருவாரூர் -ஆழித்தேர்
தேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும்
அடுத்த வார்த்தை என்ன ?
சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர் பார்க்கணுமே, நாலு யானை உயரம், அவ்வளவு பிரம்மாண்டம் என்றெல்லாம் சொல்வார்கள், நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்றால் இல்லை நிறைய பேர் சொல்லி கேள்விதான் என்று எதற்க்காக கடவுளை தேரில் எடுத்து வருகின்றனர், வேறு வாகனங்கள் இல்லையா, திருவாரூர் தேரின் சிறப்பம்சம் என்ன, அப்படி என்ன ஆச்சர்யம் அதில், இன்றைய அதன் நிலை என்ன....... என்றெல்லாம் மனதில் எழும் கேள்விகள் தமிழர்களின் கலாசாரத்தின் மேல் மதிப்பையும், மரியாதையையும் கொண்டு வநம்
திருவாரூர். சோழர்களின் ஐந்து தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்று, முதலாம் குலோத்துங்க சோழன் இங்குதான் ஆட்சி செய்தான். சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜா, முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் இது ! திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இதன் பெயர் காரணம் தெரிய வேண்டும் என்றால்...... திருவாரூர் = திரு+ஆரூர்
. திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில்
ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது)
என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது. திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம் என்பது...... திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று
திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர்
( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.
தமிழில் "தேர்" என்று வழங்கப்பெறும் சொல் வடமொழியில் "இரதம்" என்று அழைக்கப்படுகிறது. தேர் என்ற சொல் தமிழில் "உயர்ந்த" என்ற பொருளைக் குறிக்கும். இரும்பினால் ஆக்கப்பட்டதும், எளிதிற் செல்லத்தக்க உருளைகளையுடையதும், பரியங்க இருக்கையுடையதும், தாமே தூக்கி அசையத்தக்க படிகளையுடையதும், நடுவமைந்த இருக்கையில்
அமர்ந்து நடத்தத்தக்க தேர்ப்பாகனையுடையதும், அம்பு, வாள் முதலிய போர்க்கருவிகளையுடையதுமான நடுவிடத்தையுடையதும், விரும்பியதும், விரும்பிய வண்ணம் நிழலைச் செய்வதும், அழகுமிக்கதும் சிறந்த
குதிரைகளையுடையதுமானது "தேர்" என்றும் , பல சக்கரங்கள், ஆர்,
தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு, முதலிய உறுப்புகளால் ஆக்கப்பட்டு இரண்டு முதல் பல குதிரைகளால் இழுக்கப்படுவது "இரதம்" என்றும் பொருள் விளக்கம் தருகிறது அபிதான சிந்தாமணி.
"இரதம்" என்ற சொல்லிற்குப் புணர்ச்சி, தேர், பல், சாறு, அன்னரசம், சுவை, இனிமை, வாயூறு நீர், வண்டு, பாதரசம், இரசலிங்கம், பாவனை, அரைஞாண், மாமரம், கால், உடல், வஞ்சி மரம், வாகனம், எழுதுவகை, அனுராகம், நீர், வலி, நஞ்சு, இத்தி, ஏழுவகைத் தாதுக்களில் ஒன்று என்ற 25 வகைப் பொருட்களைத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. தேர் என்பது
"உற்சவ மூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச்
செல்லப்படும் கோபுரம் போன்ற மேல் அமைப்பையும், பெய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம்" என விளக்கம் தருகிறது கியாவின் தற்காலத் தமிழ் அகராதி. திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும். இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர்.
எந்தவிதமான நவீன இயந்திர வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் பிரமாண்டமான கோவில்களும், தேர்களும் மனித உழைப்பினால் மட்டுமே அமைக்கப்பட்டன. அப்போது செய்யப்பட்ட தேர்களில் மிகப்பெரியது திருவாரூர் தேர். ஆழி என்றால் பரந்து விரிந்த என்று பொருள். அதனால் தான் கடலை ஆழி என்கிறார்கள். சுனாமியை ஆழிப் பேரலை என்கிறார்கள். பரந்து விரிந்த பிரமாண்டமான தேராக இயந்திர உதவிஇல்லாமல் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வீதிவலம் வர பல நாட்கள் ஆகும்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆழித்தேர் வித்தகனை என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார். அத்தகைய சிறப்புடையது திருவாரூர்
தேர்.அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும். இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும். நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை. வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும். இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகரும் என்பது தற்போதைய நிலை.
ஊர் பெருமை, தேர் என்றால் என்ன, திருவாரூர் தேர் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள், ஆனால் ஏன் தேரில் இறைவனை வலம் வர செய்ய வேண்டும் ? இறைவனின் மூலவிக்கிரகம் எழுந்தருளியிருக்கிற இடம். மூலஸ்தானம் அல்லது கரு- அறை என்று சொல்லுவார்கள். கர்ப்பகிரஹம் என்கிற பெயராலும் அழைப்பர். மூலவரின் எழுந்தருளித் திருமேனி (விழாக்காலத்தில் பவனி வருபவர்) தான் உற்சவர். உற்சவமூர்த்தி புறப்பாடு என்பது மூலவருக்கு செய்யும் விழா. தேர் கோயிலின் கருவறை போன்றே தேரும் உபபீடம், அதிட்டானம், பாதம், விமானம் போன்ற உறுப்புகளால்
அமைந்திருப்பதால் "கோயிலின் மறுவடிவம்" என்றும்,
"நகரும் கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது. இத்தேர் சதுரம், அறுகோணம், பதின்கோணம், பன்னிரண்டுகோணம், வட்டம், நீள்வட்டம்,
நீள்சதுரம், எண்கோணம், முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில்
அமைக்கப்படுகிறது.தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கக்கப்பட்டிருக்கும். தேரினை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என மானசாரமும், விட்டுணு தத்துவ சம்கிருதையும் இலக்கணம் வகுத்திருக்கின்றன. மானசாரம் தேரின் அமைப்பு முறையையும், அதில் படிமங்கள் அமையவேண்டிய இடங்களையும் வரையறை செய்கின்றது. விட்டுணு தத்துவ சம்கிருதை "இரத நிர்மாணப்படலம்" முழுவதும் தேர் செய்யும் நியதிகளை விளக்குகிறது. தேர் செய்ய உறுதியும் வலிமையும் கொண்ட இலுப்பை மரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இறைவன் திருவீதி உலா வரும் வாகனமாகத் திகழும் தேர், சிற்பக் கலைக்கூடமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு கோயில்களிலும் உள்ள தேர்களில் அந்தத் திருத்தலத்தின் புராணச் செய்திகளுடன் தொடர்புடைய திருவுருவங்கள் சிற்பமாக இடம்பெறுகின்றன. மானசாரம் என்ற நூல் தேரில்
இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது. தேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள், குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும், வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளன. சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும். சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும். தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள்
ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர். தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும். தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை
மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில்
திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர். பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம்
நின்றுவிட்டது.
1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம்
தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத்
தொடங்கியது. பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது. இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும். சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது
சுமார் 24 மீட்டர் கொண்ட நான்கு மிகப் பெரிய வடங்கள் தேரை இழுக்க பயன்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, தேரிழுக்க, திருவாரூருக்கு அருகில் உள்ள வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலையிலிருந்து ஆட்களை அழைத்து வரப்படுவார்கள். நவீனயுகத்தில், பெல் நிறுவன பொறியாளர்களின் மேற்பார்வையில் ஹைட்ராலிக் முறைகள் பொருத்தப் பட்டு, முன்னால் இரண்டு புல்டோசர்கள் இழுக்க, பின்னால் இரண்டு புல்டோசர்கள் தள்ள ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். ஒரு காலத்தில் மனித சக்தியால் இழுக்கப் பட்ட தேரை நிலைக்கு கொண்டு வர ஆறு மாதங்கள் ஆனதாம்
சுமார் 24 மீட்டர் கொண்ட நான்கு மிகப் பெரிய வடங்கள் தேரை இழுக்க பயன்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, தேரிழுக்க, திருவாரூருக்கு அருகில் உள்ள வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலையிலிருந்து ஆட்களை அழைத்து வரப்படுவார்கள். நவீனயுகத்தில், பெல் நிறுவன பொறியாளர்களின் மேற்பார்வையில் ஹைட்ராலிக் முறைகள் பொருத்தப் பட்டு, முன்னால் இரண்டு புல்டோசர்கள் இழுக்க, பின்னால் இரண்டு புல்டோசர்கள் தள்ள ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். ஒரு காலத்தில் மனித சக்தியால் இழுக்கப் பட்ட தேரை நிலைக்கு கொண்டு வர ஆறு மாதங்கள் ஆனதாம்
ஆழித் தேரின் சிறப்பம்சம், வளைவுகளில் திரும்புவது. ஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்கு தேர் திரும்புவதை காண்பது கண் கொள்ளாக்
காட்சி.
தேர் சக்கரங்களுக்கு அடியில் கிரீஸ் தடவப்பட்ட மிகப் பெரிய இரும்பு தகடுகளை வைத்து, நின்ற நிலையிலேயே (முன் நகராமல்) தேர் திரும்புவதை வெளி நாட்டவர்களும் கண்டு வியப்பார்கள். தேர் திரும்பும்
ஒரு வேளை தேர் பாதையிலிருந்து விலகி சென்று விட்டால், தேரின் பாதையை மாற்ற லாரி மற்றும் ட்ராக்டர்களில் ஸ்லீப்பர்
ஒரு வேளை தேர் பாதையிலிருந்து விலகி சென்று விட்டால், தேரின் பாதையை மாற்ற லாரி மற்றும் ட்ராக்டர்களில் ஸ்லீப்பர்
கட்டைகள் மற்றும் முட்டு கட்டைகள் கூடவே கொண்டுவரப்படும்.
”அஸ்தத்தில் கொடியேற்றி, ஆயில்யத்தில் தேரோட்டி, உத்திரத்தில் தீர்த்தம்” என்பது 27 நாட்கள் நடைபெறும் திருவாரூர் பங்குனி உத்திர திருவிழாவின் சாராம்சம். அதாவது மாசி மாதம் (பிப்ரவரி) அஸ்த நட்சித்தரமன்று கொடியேற்றி, பங்குனி (மார்ச் இறுதி/ஏப்ரல் முதல் வாரம்) ஆயில்யம் நட்சத்திரத்தில் தேர் ஒட்டி, பங்குனி உத்திர நட்சத்திரன்று சுவாமி தீர்த்தம் கொடுப்பது ஐதீகம்.
தியாகேசர், ஆழித் தேருக்கு எழுந்தருளுவதற்க்கு முன்னால், தேவாசரிய மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்க்கு கொண்டு வரப்படுவார். அங்கிருந்து தேரோட்ட தினத்திற்க்கு இரண்டு நாட்கள் முன்பு தேருக்கு கொண்டுவரப்படுவார். முறைப்படி எல்லாம் நடந்தால், அடுத்த ஒரு வாரத்திற்க்குள், சுவாமி யதாஸ்தானம் வரவேண்டும். பணம் சம்பாதிக்கும் கும்பல்கள தங்கள் வேலையை காட்ட தொடங்கியதன் விளைவு, கடந்த சில ஆண்டுகளாக எல்லாம் மாறி போய்விட்டது.
தொண்ணூறுகளின் இறுதிவரை ஐதீக முறைப்படி நடைபெற்று வந்த பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆழித் தேரோட்ட திருவிழா, அதற்க்குப் பின்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கைக்கு மாறி அவர்களுக்கு ஏற்ற நாட்களில், அவர்களுக்கு ஏற்றார் போல் நடத்தப்படும் சடங்காக மாறிப் போனதுதான் சோகம்.
கடந்த பல ஆண்டுகளாகவே, தேரோட்டத் திருவிழா, குறிப்பிட்ட பங்குனி ஆயில்ய நட்சத்திர தினத்தில் நடைபெறுவது இல்லை. பள்ளி/கல்லூரி தேர்வு சமயமாக இருப்பதால், திருவிழாவை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை சுவாமி, ஆயிரங்கால் மண்டபத்தில் மாதக் கணக்கில் தேவுடு காக்க வேண்டிவரும்.
பள்ளி மாணவர்களின் படிப்பு வீணாகப் போகக் கூடாது என்ற அக்கறை எல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி அக்கறை ஏதாவது இருந்தால் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மட்டார்கள் அல்லவா? இதை விட பல்லாயிரம் மக்கள் கூடும் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதத்தில்தான் நடக்கும் என்பது குறிப்பிடதக்கது. பள்ளி நாட்களில் நடத்தினால் திருவிழாக் கூட்டம் குறைந்து, அவர்களுக்கு வருமானம் இல்லையாம்.
இந்து அமைப்புகள் மட்டும் ஐதீக முறைப்படி குறிப்பிட்ட நாளில் தான் தேரோட்டம் நடைபெற வேண்டும் என்று போராடி வருகிறார்கள். ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில், இந்து அமைப்புகள், தாங்களே செலவு செய்து சப்பரம் போன்ற ஒன்றை இழுத்து வருவார்கள். அரசு நிர்வாகம் தனது சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து, அவர்க்ளை ராஜ வீதிகளில் வரவிடாமல் செய்யும். இந்த ஆண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது.
அடுத்தது, தேரோட்டத்திற்க்கு நாள் குறித்துவிட்டு, தேரை முன்னதாகவே கட்டி வைத்து விட்டு, சுவாமியை தேருக்கு கொண்டு வந்து
தியாகேசர், ஆழித் தேருக்கு எழுந்தருளுவதற்க்கு முன்னால், தேவாசரிய மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்க்கு கொண்டு வரப்படுவார். அங்கிருந்து தேரோட்ட தினத்திற்க்கு இரண்டு நாட்கள் முன்பு தேருக்கு கொண்டுவரப்படுவார். முறைப்படி எல்லாம் நடந்தால், அடுத்த ஒரு வாரத்திற்க்குள், சுவாமி யதாஸ்தானம் வரவேண்டும். பணம் சம்பாதிக்கும் கும்பல்கள தங்கள் வேலையை காட்ட தொடங்கியதன் விளைவு, கடந்த சில ஆண்டுகளாக எல்லாம் மாறி போய்விட்டது.
தொண்ணூறுகளின் இறுதிவரை ஐதீக முறைப்படி நடைபெற்று வந்த பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆழித் தேரோட்ட திருவிழா, அதற்க்குப் பின்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கைக்கு மாறி அவர்களுக்கு ஏற்ற நாட்களில், அவர்களுக்கு ஏற்றார் போல் நடத்தப்படும் சடங்காக மாறிப் போனதுதான் சோகம்.
கடந்த பல ஆண்டுகளாகவே, தேரோட்டத் திருவிழா, குறிப்பிட்ட பங்குனி ஆயில்ய நட்சத்திர தினத்தில் நடைபெறுவது இல்லை. பள்ளி/கல்லூரி தேர்வு சமயமாக இருப்பதால், திருவிழாவை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை சுவாமி, ஆயிரங்கால் மண்டபத்தில் மாதக் கணக்கில் தேவுடு காக்க வேண்டிவரும்.
பள்ளி மாணவர்களின் படிப்பு வீணாகப் போகக் கூடாது என்ற அக்கறை எல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி அக்கறை ஏதாவது இருந்தால் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மட்டார்கள் அல்லவா? இதை விட பல்லாயிரம் மக்கள் கூடும் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதத்தில்தான் நடக்கும் என்பது குறிப்பிடதக்கது. பள்ளி நாட்களில் நடத்தினால் திருவிழாக் கூட்டம் குறைந்து, அவர்களுக்கு வருமானம் இல்லையாம்.
இந்து அமைப்புகள் மட்டும் ஐதீக முறைப்படி குறிப்பிட்ட நாளில் தான் தேரோட்டம் நடைபெற வேண்டும் என்று போராடி வருகிறார்கள். ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில், இந்து அமைப்புகள், தாங்களே செலவு செய்து சப்பரம் போன்ற ஒன்றை இழுத்து வருவார்கள். அரசு நிர்வாகம் தனது சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து, அவர்க்ளை ராஜ வீதிகளில் வரவிடாமல் செய்யும். இந்த ஆண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது.
அடுத்தது, தேரோட்டத்திற்க்கு நாள் குறித்துவிட்டு, தேரை முன்னதாகவே கட்டி வைத்து விட்டு, சுவாமியை தேருக்கு கொண்டு வந்து
ஒரு வாரம் பத்து நாட்கள் வைத்து, பார்வையாளர்களை தேரில்
ஏறவைத்து அதற்க்கு கட்டணம் வசூலித்து காசு பார்த்து
கொண்டிருக்கிறார்கள்.
ஆழித் தேரோட்டம் நடைபெறும் நாட்கள் சகலவிதமான பொருட்களும் கிடைக்கும் திருவிழா வியாபாரம், பெரிய கோவிலின் நான்காம் பிரகாரத்தில் (ஆயிரங்கால் மண்டபத்தின் முன்) கொடி கட்டி பறக்கும்.
இத்தனைக்கும் தியாகேசப் பெருமான் ஒன்றும் பஞ்சபராரி அல்ல. பல கோடி ரூபாய் சொத்து உள்ள, தமிழகத்தின் பெரிய கோவில்களில் ஒன்று. கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்தன. இன்று என்னவானது என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
சரித்திர புகழ் வாய்ந்த ஒரு ஆழித் தேரோட்டம், சீர் குலைந்து போய் ஒரு சடங்காக வியாபாரிகளால் நடத்தப் பட்டு கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் தியாகேசப் பெருமான் ஒன்றும் பஞ்சபராரி அல்ல. பல கோடி ரூபாய் சொத்து உள்ள, தமிழகத்தின் பெரிய கோவில்களில் ஒன்று. கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்தன. இன்று என்னவானது என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
சரித்திர புகழ் வாய்ந்த ஒரு ஆழித் தேரோட்டம், சீர் குலைந்து போய் ஒரு சடங்காக வியாபாரிகளால் நடத்தப் பட்டு கொண்டிருக்கிறது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் வரும் 16ம் தேதி நடைபெறுவதையொட்டி சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நடந்தது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்கதாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் தியாகராஜ சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரியது. தேரில் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2010ம் ஆண்டிற்கு பின்னர் தேரோட்டம் நடைபெறவில்லை. தேரை புதுப்பிப்பதற்காக கடந்த திமுக ஆட்சி காலத்தில் ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நான்கரை ஆண்டுகள் வரை கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் துவங்கி முடிவடைந்தது. கடந்தாண்டு அக்டோபர் 26ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடந்தது. வரும் 16ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான
சண்டிகேஸ்வரர் தேர் ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புதிதாக செய்யப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி காலை 7.30மணிக்கு சுவாதி நட்சத்திரம், மிதுன லக்னத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. வரும் 15ம் தேதி காலை 6மணிக்கு விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேரோட்டம் நடக்க உள்ளது. கடந்த 8 ஆம் தேதி புதன்கிழமை காலை தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடந்து முடிந்தது. . திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கீழவீதி, தெற்குவீதி உள்பட
முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது
மேலும் விநாயகா தேர் மற்றும் சுப்ரமணியர் தேரோட்டம் வரும் 15 ம்
தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள்ளும்,
ஆழித்தேர், மறுநாள் 16ம் தேதி காலை 7.30மணிக்கு சுவாதி நட்சத்திரம், மிதுன லக்னத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது.
அம்பாள் தேர்,சண்டிகேஸ்வரர் தேர் ஆழித்தேர் வடம் பிடிக்கப்படும்.
தெப்பத் திருவிழா வரும் ஜூலை மாதம் 2,3 மற்றும் 4 ஆம் தேதி என
மூன்று நாட்களும் இரவு 7 மணி முதல் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசு துறை அலுவலர்களுக்கு பல்வேறு பணிகள்
ஒதுக்கப்பட்டு முன்னேற் பாடுகள் நடைபெற்று வருகிறது .
கார்த்திகேயன்
No comments:
Post a Comment