Monday 11 July 2016

உலக மக்கள் தொகை நாள் (World Population Day)


உலக மக்கள் தொகை நாள்


உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.
"பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல்; பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவு" என்பது 2009 ஆம் ஆண்டிற்கான தொனிப் பொருளென ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (UNFPA) அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அகுமது ஒபெய்ம் உலக மக்கள் தொகை நாள் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில்; “இன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் இறப்பு வீதமே உலகில் மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின்மையாக விளங்குகின்றது." என்று குறிப்பிட்டார்

உலக மக்கள் தொகை



உலக மக்கள்தொகை வளர்ச்சியானது கிபி 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியது. 1840 இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் 1960இல் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன்,1999 ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்திருக்கின்றது
மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது. ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் தற்போதைய வளர்ச்சியானது 13 வீதத்திலிருந்து, அடுத்த 300 ஆண்டுகளில் 24 வீதமாக அதிகரிக்கின்ற பொழுதிலும்,ஐரோப்பாவில் 12 வீதத்திலிருந்து 7 வீதமாகக் குறையுமென எதிர்வு கூறப்படுகின்றது. குடித்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ,எத்தியோப்பியா, வங்காள தேசம் போன்ற நாடுகள் இனங் காணப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எளிய மக்கள் மத்தியில் குடும்ப நலத் திட்டமிடல்கள் பற்றிய கருத்தரங்குகள், பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தல், சிறப்பான பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பள்ளிகளில் மக்கள்தொகைக் கல்விக்கு முக்கியமளிப்பதுடன், மக்கள்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் சமூகப் பொருளாதார தாக்கங்கள் பற்றிய செயலமர்வுகள் மேற்கொள்வது அவசியமாகின்றது.
உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 7,024,000,000 பேர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது அதன் அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயலகம் தற்பொழுது உலக மக்கள் தொகை 6,831,200,000 என மதிப்பிட்டுள்ளது
1400 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.  [4]  மிக விரைவான விகிதத்தில் (1.8%க்கும் மேலானதாக) வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை அதிகரிப்பு, 1950 ஆண்டுகளில் ஒரு குறுகிய கால அளவிலும் அதன் பின்னர் 1960 - 1970 ஆண்டுகளில் நீண்ட கால கட்டங்களிலுமாக தொடர்ந்து உயர்ந்து வருவது தெளிவாகும். (வரைபடத்தைப் பார்க்கவும்). 1963 ஆம் ஆண்டு அடைந்த உச்சபட்ச அளவான வருடத்திற்கு 2.2% என்பதில் ஏறக்குறைய பாதி அளவினை 2009 ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் அடைந்தது. 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகெங்கும் நிகழும் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்ததிலிருந்து, தற்போது ஆண்டிற்கு சுமார் 140 மில்லியன் என்ற அளவில் ஒரு வகை சம நிலைபாட்டுடனும், அதே அளவில் மாறாததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆண்டிற்கு 57 மில்லியன் மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050 ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டிற்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால் உலக மக்கள்தொகையானது 2050  ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதைக் குறித்து மக்கள் மிகையான கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். தற்போதைய மக்கள்தொகை அதிகரிப்பும் அதனுடன் நிகழும் வளஆதாரங்கள் பயன்பாட்டு அதிகரிப்பும் சூழ்மண்டலத்தைப் பல வகைகளில் பாதிப்படைய வைக்கும் என்பதே அறிவியல் கருத்திசைவு ஆகும்
கிமு 70,000 காலகட்டத்தில் மிகையான மக்கள் தொகை உயர்வால் நெருக்கடி நிலை உருவானதாக அறிவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். (பார்க்கவும் டோபா பேரழிவு கொள்கை). இக்காலத்திற்குப் பிறகும் விவசாயம் வளர்ச்சியடைந்த காலம் வரையிலும் உலக மக்கள்தொகையானது ஒரு மில்லியனாக நிலைகொண்டது. அவர்களுடைய பிழைப்பு, வேட்டை மற்றும் மேய்ச்சலை இன்றியமையாததாகக் கொண்டிருந்தது. இத்தகைய வாழ்க்கை முறை இயற்கையாகவே குறைவான மக்கள் தொகை அடர்த்தியை உறுதி செய்தது. ஒருங்கமைந்த கிழக்கு மற்றும் மேற்கு ரோமானியப் பேரரசில் 55 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்தார்கள் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.. (கிபி 300-400). 541 மற்றும் 700களுக்கு இடையில் ஐரோப்பிய மக்கள் தொகை ஏறக்குறைய 50 சதவிகிதம் குறைவதற்கு ஜஸ்டினியன் பிளேக் நோய்காரணமாக இருந்தது. 1340 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் மக்கள்தொகை 70 மில்லியனுக்கும் மேல் இருந்தது 14 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கருப்பு மரணம் என்ற பெரும்பரப்புத் தொற்று நோயானது 1400 ஆம் ஆண்டுகளில் உலகின் மக்கள்தொகையான + மில்லியனிலிருந்து தோராயமாக 350 மில்லியனுக்கும் 375 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகைக்குக் குறையச் செய்திருக்கலாம். ஐரோப்பிய மக்கள் தொகை 1340 ஆம் ஆண்டுகளில் நிலையை எட்ட ஏறக்குறைய 200 ஆண்டுகள் பிடித்தன. 
1368 ஆம் ஆண்டுகளில் மிங் வம்சம் நிறுவிய போது, சீனாவின் மக்கள் தொகை ஏறக்குறைய 60 மில்லியனாக இருந்தது, 1644 ஆம் ஆண்டுகளில் இவ்வம்சம் முடிவுக்கு வந்த பொழுது மக்கள் தொகை சுமார் 150 மில்லியனை அடைந்திருக்கலாம். 1500 ஆம் ஆண்டுகளில் 2.6 மில்லியனாக இருந்த இங்கிலாந்தின் மக்கள் தொகை அதிலிருந்து உயர்ந்து 5.6 மில்லியனை எட்டியது. 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் குடியேற்ற நாட்டினர் வழியாக அமெரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு வந்த புதிய பயிர்கள் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு வழிவகுத்தன 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய வர்த்தகர் வந்ததில் இருந்து,மக்காச்சோளம்மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவை ஆப்ரிக்காவின் பாரம்பரிய பயிர்களுக்கு மாற்றாக அக்கண்டத்தின் மிகமுக்கியமான உணவுப்பயிர்களாக அமைந்தன. ஆல்ஃப்ரெட் டபிள்யூ. க்ராஸ்பி அவர்கள் மக்காச் சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் பிற அமெரிக்கப் பயிர்களின் அதிகரித்த விளைச்சலானது, "மழைக்காட்டுப் பகுதிகளிலிருந்து, துல்லியமாகச் சொன்னால், அமெரிக்கப் பயிர்கள் முன்பைக்காட்டிலும் அதிக குடியேற்றத்தைச் சாத்தியமாக்கிய இடங்களிலிருந்து தங்களுடைய பல, ஒருவேளை அதிகபட்சமான சரக்குகளை அடிமை வியாபாரிகள் வரவழைப்பதைச் சாத்தியமாக்கியது" என்று ஊகித்தார். 
ஏறக்குறைய 3.8 பில்லியன் மக்களுடன் ஆசியா உலக மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் 12 சதவிகிதம் ஆன 1 பில்லியன் மக்களுடன்ஆப்பிரிக்கா தொடர்கிறது. ஐரோப்பாவின் 731 மில்லியன் மக்கள் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 11 சதவிகிதம் ஆகும். வட அமெரிக்கா 514 மில்லியனுக்கும் (8%), தென்னமெரிக்கா 371 மில்லியனுக்கும் (5.3%) மற்றும் ஆஸ்திரேலியா 21 மில்லியனுக்கும் (0.3%) இருப்பிடமாகும்.


இந்தியாவின் மக்கள்தொகை

இந்தியா உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையே கொண்டிருந்தாலும் உலகின் 17.5 சதவீத மக்கள் தொகையைக்கொண்டுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா மட்டுமேயாகும். ஏறக்குறைய 50 சதவிகிதம் 25 வயதிற்கும் , 65% சதவிகிதம் 35 வயதிற்கு குறைந்தவர்களாவர் . 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி , 72.2 சதவிகிதம் மக்கள் 6,38,000 க்கும் அதிகமான கிராமங்களில் வாழ்கின்றனர். மீதமுள்ள 27.8 சதவிகித மக்கள் 5100-க்கும் மேற்பட்ட பெரு மற்றும் சிறு நகரங்களில் வாழ்கின்றனர். 
இந்திய அரசானது மொத்தம் 22 மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ளது. 80%-க்கும் அதிகமான மக்கள் இந்துக்கள் ஆவர். மேலும் இந்தியாவில் 13.4 விழுக்காடு இசுலாமியர்கள் வசிக்கின்றனர். இந்தியா உலகிலுள்ள இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். கிறித்தவர்கள்,சீக்கியர்கள், பார்சிக்கள், சமணர்கள், மற்றும் புத்த மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர்.

மக்கள் சமூகம் - இந்தியா
மக்கள் தொகை:
1,210,193,422 (ஆகஸ்டு 2015) (இரண்டாம் இடம்)
வளர்ச்சி விகிதம்:
1.51% (2009 கணிப்பு) (93ஆம் இடம்)
பிறப்பு விகிதம்:
20.22 births/1,000 population (2013 கணிப்பு)
இறப்பு விகிதம்:
7.4 deaths/1,000 population (2013 கணிப்பு)
வாழ்க்கை எதிர்பார்ப்பு:
68.89 ஆண்டுகள் (2009 கணிப்பு)
–ஆண்:
67.46 ஆண்டுகள் (2009 கணிப்பு)
–பெண்:
72.61 ஆண்டுகள் (2009 கணிப்பு)
கருவுறுதல் விகிதம்:
2.44 children born/woman (SRS 2011)
குழந்தை இறப்பு விகிதம்:
44 deaths/1,000 live births (2011 கணிப்பு)
வயதுக் கட்டமைப்பு
0-14 வருடங்கள்:
31.2% ( 190,075,426ஆண்கள்/ 172,799,553 பொண்கள்) (2009 கணிப்பு)
15-64 வருடங்கள்:
63.6% (381,446,079ஆண்கள்/359,802,209 பொண்கள்) (2009 கணிப்பு)
65-மேல்:
5.3% (29,364,920 ஆண்கள்/32,591,030பொண்கள்) (2009 கணிப்பு)
பால் விகிதம்
பிறப்பில்:
1.12 ஆண்கள்/பொண்கள் (2009 கணிப்பு)
15க்குக் கீழ்:
1.10 ஆண்(கள்)/பொண்(2009 கணிப்பு)
15-64 வருடங்கள்:
1.06 ஆண்(கள்)/பொண் (2009 கணிப்பு)
65-மேல்:
0.90 ஆண்(கள்)/பொண் (2009 கணிப்பு)

ஒப்பீட்டளவிலான புள்ளிவிவரங்களின்

பகுப்பு
உலக தரவரிசை
குறிப்பு (மேற்கோள்கள்)
பரப்பளவு
7ஆம் இடம்

மக்கள் தொகை
2ஆம் இடம்

மக்கள்தொகை வளர்ச்சி
102/ 212
2010இல்
மக்கள்தொகை அடர்த்தி(people per square kilometer of land area)
24/212
2010இல்
ஆண் : பெண் பிறப்பு சதவிகிதம்
12/214
2009இல்


தமிழ்நாட்டின் மக்கள்தொகை 

2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்து 7 கோடியே 
இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 1,21,01,93,422. இதில் 62 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 248 ஆண்களும், 58 கோடியே 64 லட்சத்து 69 லட்சத்து 174 பெண்களும் அடக்கம். தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 ஆண்களும், 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பெண்களும் அடக்கம்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களின் மக்கள் தொகை விவரம்: மாவட்டம்-2001-ல் மக்கள் தொகை-2011-ல் மக்கள் தொகை 

1.திருவள்ளூர்-27,54,756- 37,25,697 
2.சென்னை-43,43,645- 44,81,087 
3.காஞ்சிபுரம்-28,77,468- 39,90,897 
4.வேலூர்-34,77,317- 39,28,106 
5.தர்மபுரி-12,95,182- 15,02,900
6.கிருஷ்ணகிரி-15,61,118-18,83,731 
7.திருவண்ணாமலை-21,86,125-24,68,965 
8.விழுப்புரம்-29,60,373- 34,63,284 
9.சேலம்-30,16,346- 34,80,008 
10.நாமக்கல்-14,93,462- 17,21,179 
11.ஈரோடு-20,16,582- 22,59,608 
12.நீலகிரி-7,62,141- 7,35,071 
13.கோவை-29,16,620- 34,72,578 
14.திருப்பூர்-19,20,154- 24,71,222 
15.திண்டுக்கல்-19,23,014- 21,61,367 
16.கரூர்-9,35,686- 10,76,588 17.திருச்சி-24,18,366- 27,13,858 1
8.பெரம்பலூர்-4,93,646- 5,64,511 
19.அரியலூர்-6,95,524- 7,52,481 
20.கடலூர்-22,85,395- 26,00,880 
21.நாகப்பட்டினம்-14,88,839- 16,14,069 
22.திருவாரூர்-11,69,474- 12,68,094 
23.தஞ்சாவூர்-22,16,138- 24,02,781 
24.புதுக்கோட்டை-14,59,601- 16,18,725 
25.சிவகங்கை-11,55,356- 13,41,250 
26.மதுரை-25,78,201- 30,41,038 
27.தேனி-10,93,950- 12,43,684 
28.விருதுநகர்-17,51,301- 19,43,309 
29.ராமநாதபுரம்-11,87,604- 13,37,560 
30.தூத்துக்குடி-15,92,769- 17,38,376 
31.திருநெல்வேலி-27,03,492- 30,72,880 

32.கன்னியாகுமரி-16,76,034- 18,63,174.


karthikkn

No comments:

Post a Comment

Ads Inside Post