Saturday 13 August 2016

கியூபாவின் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ - அறிந்து கொள்வோம்

கியூபாவை இன்றுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாத்தியத்திடம் இருந்து தனது தேசத்தை கட்டிக்காப்பாற்றி வந்த பெருமை 

கியூபாவின் புரட்சி நாயகன் 
பிடல் 
காஸ்ட்ரோவையே சாரும்....




சே குவேரா உள்ளிட்ட பல தென் அமெரிக்கா நாடுகளின் இடதுசாரி தலைவர்களையும் அமெரிக்கா மற்றும் அதன் உளவு அமைப்பான சிஐஏ-வும் படுகொலை செய்து தனது ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக்கொண்டுள்ளது.

ஆனால், அவர்களால், எத்தனையோ சதிகளுக்கு மத்தியிலும் கியூபாவை தனது கொடிய அணு குண்டுகளாலோ, போர் பயங்கரவாதத்தாலோ அதன் நிழலைக்கூட அசைத்துக்கூட பார்க்க முடியாததற்கு ஒரே காரணம், அந்த தேசத்தின் நாயகன், மக்களின் ஆதர்ஷமாகவும், ஒரே மந்திரமாகவும் இன்றளவும் திகழ்ந்து வரும் ஃபிடல் காஸ்ட்ரோதான்.

கியூபா ஒரு அறிமுகம்..

cuban flag



1492-ல்தான் கொலம்பஸ் கியூபாவைக் கண்டுபிடித்தார். பின்னர் (வழக்கம்போல!) அது ஸ்பெயினுக்குச் சொந்தம் என்றார்.
அடுத்த இருபது வருடங்களில் ஸ்பெயின் நாட்டினர் அங்கே கொத்துக் கொத்தாக குடியேறத் தொடங்கினர்.
குடியேறியவர்களில் பெரும்பாலான வர்கள் தேர்ந்தெடுத்தது விவசாயத்தை. கரும்பு, புகையிலை ஆகியவை அங்கு அமோகமாக விளைந்தன. நாளடைவில் அங்கு நிறைய பருத்தி மில்கள் செயல்படத் தொடங்கின.
விரைவிலேயே கியூபா பணக்கார நாடானது. ‘அமெரிக்கன் இண்டியன்ஸ்’ எனப்படும் உள்ளூர்வாசிகள் மட்டுமே வேலைக்காக அமர்த்தப்பட்டனர். குறை வான கூலி, மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட விதம் ஆகியவற்றின் காரணமாக நாள டைவில் இவர்களின் எண்ணிக்கை சுருங்கிப் போனது. மாற்று ஏற்பாடாக, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்து, அவர்களின் உழைப்பில் கொழிக்கத் தொடங்கினார்கள், கியூபாவில் குடிபுகுந்த ஸ்பானிஷ்காரர்கள்.
1527-ல் இப்படிக் கடும் வேலைகளைச் செய்வதற்காக ஆப்ரிக்காவிலிருந்து கியூபாவுக்கு வரவழைக்கப்பட்ட அடிமை கள், தாங்கள் மிகக் கேவலமாக நடத்தப் படுவதைக் கண்டு புரட்சியில் ஈடுபட, அது அரசால் நசுக்கப்பட்டது. 1607-ல் கியூபாவின் அதிகார பூர்வமான தலைநகரமாக ஹவானா அறிவிக்கப்பட்டது.
1649-ல் அங்கு பரவிய கொள்ளை நோயால் கியூபாவில் வசித்தவர்களில் கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பங்கினர் உயிரிழந்தனர்.
சுமார் நானூறு வருடங்கள் கியூபாவை ஸ்பெயின் ஆண்டது. அவ்வப்போது புரட்சிகள் ‘மினி’ சைஸில் வெடிப்பதும், தன் ‘மாக்ஸி’ படைகளைக் கொண்டு அவற்றை ஸ்பெயின் அடக்குவதும் வாடிக்கையானது.
பக்கத்து நாடான ஐமைகாவுடன் வணிகம் செய்ய வசதியாக இருக்கும் என்று கருதி பிரிட்டிஷ்காரரின் படைகள் கியூபாவின் நகரமான சாண்டியாகோவை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். இதை ஸ்பெயின் எதிர்த்தது. ஆனால் நாளடைவில் ஐமைகா இங்கிலாந்துக்குச் சொந்தமானது என்பதை ஸ்பெயின் வெளிப்படையாக அங்கீகரித்தது. பதிலுக்கு சாண்டியா கோவிலிருந்து பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கின.
‘’கியூபாவை நாமே ஆக்கிரமித்தால் என்ன?’’ - இப்படியொரு எண்ணம் தென் அமெரிக்காவின் அப்போதைய (1826) தளபதியான சைமன் பொலிவியருக்குத் தோன்றியது.
 
simon bolivar postage-cuba

அவரும், அதே கருத்தைக் கொண்ட மெக்ஸிகோ நாட்டுத் தலைவர் களும் சேர்ந்து ஒரு ராணுவத்தை உருவாக்கினார்கள். கியூபாவுக்குச் சென்று ஸ்பெயினுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த இந்த படை தயாரானது.
நடுவில் அமெரிக்கா புகுந்தது. சண்டை மூண்டால் ஸ்பெயினுக்கே தன் ஆதரவு என்று அறிவித்தது. வேறு வழியில்லாமல் தென் அமெரிக்கா - மெக்ஸிகோ கூட்டுப்படை பின்வாங்கிவிட்டது. நாளடைவில் ‘’கியூபாவை நம்முடனேயே இணைத்துக் கொண்டால் நன்றாயிருக்குமே’’ என்று கருதத் தொடங்கியது அமெரிக்கா! ஆனால் ஸ்பெயின் ஆர்வம் காட்டவில்லை.
அதேசமயம், கொடுமைக்குள்ளான கியூபாவின் உள்ளூர்வாசிகள் சுதந்திரத் துக்கு ஏங்கினார்கள், கிளர்ச்சி செய்தார்கள்.
1898-ல் ஹவானா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பல் ஒன்று வெடித்தது. கியூபாவிலுள்ள தங்கள் நாட்டுக்காரர்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா அனுப்பிய ராணுவக் கப்பல் இது. மர்மமான முறையில் அந்தக் கப்பல் வெடித்துச் சிதறியதில் 275 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.




வெடித்த கப்பலின் பெயர் MAINE. எதனால் வெடித்தது? இன்றுவரை தெரியவில்லை. என்றாலும் அமெரிக்கா ஸ்பெயின் மீது போர் பிரகடனம் வெளி யிட்டது. ஆக ஸ்பானிய - அமெரிக்கப் போர் தொடங்கியது. (கியூபாவை அப்போது ஆட்சி செய்தது ஸ்பெயின்தானே).
ஸ்பெயின் ராணுவம் சரணடைந்தது. ‘பாரிஸ் ஒப்பந்தம்’ இரு தரப்பினராலும் கையெழுத்திடப்பட்டது. கியூபா மீது தான் கொண்டிருந்த சகல உரிமைகளையும் விட்டுத் தந்தது ஸ்பெயின்.
கியூபாவில் தனது ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது அமெரிக்கா. சில வருடங்கள் தான். கியூபாவாசிகள் ஸ்பெயினுக்காகக் காட்டிய அதே சிவப்புக் கொடியை அமெரிக் காவுக்கும் காட்டினார்கள். அமெரிக்கா பணிந்தது. கியூபா தன்னைத் தானே ஆளட்டும் என்று விட்டுக் கொடுத்தது.
ஆனால் ’கியூபாவிலுள்ள காண்டனமோ விரிகுடா என்ற இடத்தை அமெரிக்காவுக்கு நிரந்தரக் குத்தகைக்கு விடவேண்டும். அங்கே அமெரிக்கா தனது கடற்படையை நிறுத்தி வைக்கலாம்’ என்பது போன்ற நிபந் தனைகளை விதித்தது. அன்றைய அவசரத் துக்கு கியூபா இதற்கு ஒப்புக்கொண்டது.
படிஸ்டா என்பவர் சுதந்திர கியூபாவின் அதிபரானார். தான் வைத்ததுதான் சட்டம் என்று அவர் ஆட்சி நடத்த ஆரம்பித்த போது மக்கள் நொந்து நூலாகிப் போனார்கள்.
இதைக் கண்டு குமுறினார் ஓர் இளம் வழக்கறிஞர். குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை படிஸ்டா வரவேற்பதற்கு எதிர்ப்பு காட்டினார். படிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சி யில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையானவுடன், மெக்ஸிகோவுக்குச் சென்று திட்டங்களைத் தீட்டிய அந்த இளம் வழக்கறிஞர் பிடல் காஸ்ட்ரோ!.
யாருக்கும் இல்லாத ஒரு பெருமை பிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர்.

கியூபாவின் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ




பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (Spanish: [fiˈðel ˈkastro], பிறப்பு: ஆகஸ்ட் 13, 1926)  கியூபாவைச்சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில்1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின்முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.


இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர். படித்தது மதபோதகப் பள்ளிகளான ஜெசூட் கல்வி அமைப்புகளில்தான். படிப்பில் நிறைய நாட்டம் கொண்டவர். முக்கியமாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். பாடங்கள் ஒருபுறமிருக்க பாடமல்லாத விஷயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.
17-year-old Fidel Castro playing basketball at the Jesuit College of Bethlehem. Cuba, 1943
அரசியலில் மாளாத ஆர்வம். தவிர தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஆனால் இத்தனை இருந்தும் அவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாராம். பிறருடன் எளிதில் பழகமாட்டார். ஆனால் இந்தக் கூச்சமெல்லாம் கல்லூரியில் சேரும் வரையில்தான்.
1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார். அந்த ஊர் சட்டக் கல்லூரியிலும் வன்முறை, அரசியல், கோஷ்டி மோதல் ஆகியவை நீக்கமற நிறைந்திருந்தன.
பிடல் காஸ்ட்ரோவும் ஓர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் The Union Insurreccional Revolucionaria என்பதாகும்.

Castro, Rafael del Pino y Armando Gali Menendez 1947 Gang de la Union Insurreccional Revolucionaria (UIR)
 இந்தக் காலகட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ மீது சரியாகவோ தவறாகவோ சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றில் முக்கியமானது எதிரணியைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவனை அவர் கொலை செய்தார் என்பது. பரவலாகப் பேசப்பட்டாலும் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை.
கல்லூரிப் பருவத்தில் பிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது. கல்லூரியில் அவர் மாணவர் சங்கத் தலைவர் பதவியை வகிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆசை அவருக்கு இல்லை என்பதில்லை. சிலமுறை மாணவர் சங்கத் தேர்தலில் நின்றும் அவர் ஜெயிக்கவில்லை.
என்றாலும் பிடல் காஸ்ட்ரோவின் புகழ் பரவிக் கொண்டேவந்தது. அவரது அரசியல் ஆசையும் பெருகிக் கொண்டே வந்தது.

Rafael Trujillo, Fidel Castro

ரஃபேல் ட்ரூஜில்லோ என்பவர் டொமினி கன் குடியரசை ஆண்டு வந்தார் (மேற் கிந்தியத் தீவுகளில் கியூபாவுக்கு அடுத்த பெரிய நாடு இது). இவரது அரசின் அடக்கு முறையை எதிர்த்து பிரபல எழுத்தாளர் ஜுவான் போஷ் என்பவர் உருவாக்கிய புரட்சிப் படையில் சேர்ந்து கொண்டார் பிடல் காஸ்ட்ரோ.
இதற்காக அவர் தற்காலிகமாக பல்கலைக்கழகப் படிப்பிலிருந்து விலகினார். (இப்போதெல்லாம் பணியிலிருந்து சிறிது காலம் விலகி மீண்டும் அதில் சேரும் sabbatical என்ற வசதி சில நிறுவனங்களில் இருப்பதுபோல் அப்போது ஹவானா பல்கலைக்கழகத்திலும் இருந்திருக்க வேண்டும்!)
ஆனால் டொமினிகன் குடியரசை நோக்கி கப்பலில் இந்தப் புரட்சிக் குழு பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று `இப்போது செயல்பாடு வேண்டாம்’ என்ற ஆணை வந்தது.
அப்போது பிடல் காஸ்ட்ரோ எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். கடலில் குதித்தார். தன் தலைமீது துப்பாக்கியை சுமந்தபடி வெகுதூரம் கடந்து கரையை அடைந்தார். அந்தப் பகுதியில் சுறாமீன்கள் அதிகம் என்பதும் இந்தத் தகவல் பிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அதற்கு அடுத்த ஆண்டு பிடல் காஸ்ட்ரோ பலவித செயல்களில் ஈடுபட்டார். அந்தச் செயல்களைப் புரட்சி என்று கூறி சிலிர்ப்பதோ, வன்முறை என்று கூறி வெறுப்பதோ அவரவர் பார்வையைப் பொறுத்தது.
கொலம்பியாவில் லிபரல் கட்சித் தலைவர் ஜார்ஜ் கெய்டான் என்பவர் படுகொலை செய்யப்பட அந்த நாடே பற்றி கலவரங்களில் எரியத் தொடங்கியது. அந்தக் கலவரங்களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார் பிடல் காஸ்ட்ரோ. தெருக்களில் வீடுவீடாகச் சென்று அமெரிக்காவுக்கு எதிரான அறிக்கைகளை விநியோகித்தார்.
கொலம்பிய ஆட்சியாளர்கள் கியூபா மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவர்களைத் துரத்த, அவர்கள் கொலம்பியாவில் உள்ள கியூபா தூதரகத்தில் சரணடைந்தனர். பிறகு அங்கிருந்து ஹவானா வந்து சேர்ந்த பிடல் காஸ்ட்ரோ தனது சட்டப் படிப்பைத் தொடர்ந்தார்!


பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடிப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது.
கியூபாவில் அப்போது ஆர்டொடாக்ஸோ கட்சி என்ற ஒன்று இருந்தது. நாட்டிற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என்றது அந்தக் கட்சி. சமூக நீதியை முன்வைத்தது. ஆட்சிக்கு வந்ததும் ஊழலை ஒழிப்பது தன் தலையாய பணி என்றது. பிடல் காஸ்ட்ரோ இந்தக் கட்சியின் சித்தாந்தங்களினால் ஈர்க்கப்பட்டார்.
ஆர்டொடாக்ஸோ கட்சியில் தன்னை இணைத்துக் கொண் டார் பிடல் காஸ்ட்ரோ. அதுவும் அந்தக் கட்சியின் தலைவராக இருந்த எடுவார்டோ சிபாஸ் என்பவரை பிடல் காஸ்ட்ரோவுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.
Chibas, Fidel Castro (with tie), Roberto Agramonte

இந்த இடத்தில் எடுவார்டோ சிபாஸ் குறித்து சில விஷயங்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் ஒரு போதும் கியூபாவின் ஆட்சித் தலைவர் ஆனதில்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் (1940-ல் இருந்து அவர் மறைந்த 1951 வரை என்று வைத்துக் கொள்ளலாம்) அவர் கியூபாவின் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.
கியூபாவின் மிகக் கவர்ச்சிகர மான வானொலி வர்ணனையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் இவர். அப்போது அரசின் கொள்கைகளைப் பற்றி அழகாக விமர்சித்து பலரது மனங் களை மாற்றினார். முக்கிய மாக கியூபாவின் ஊழல் அரசியல் வாதிகளை பகிரங்கப்படுத்தினார்.
இறுதிவரை கறைபடாத கைகளுடன் வாழ்ந்தார். அவரது அரசியல் எதிரிகளின் சொத்து வகைதொகை இல்லாமல் ஏற, சிபாஸின் சொத்துகள் இறங்குமுகத்தில் இருந்தன. தன் அப்பாவால் கட்டப்பட்ட வீடுகளை விற்றுத்தான் 1948-க்கான அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். (பின்னர் 1933 புரட்சி, படிஸ்டாவுக்கெதிரான போராட்டம் என்று பல விதங்களில் இவரது பங்களிப்பு தொடர்ந்தது). இப்படி ஒரு பின்னணி கொண்ட சிபாஸினால் ஈர்க்கப்பட்டுதான் அவரது கட்சியில் சேர்ந்தார் பிடல் காஸ்ட்ரோ.
அந்தக் காலகட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ, தன் சக மாணவியான மிர்டா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தத்துவத்தை முக்கிய பாடமாக எடுத்துப் படித்துக் கொண்டிருந்தவர் மிர்டா. செல்வ வளம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னாளில் பிடல் காஸ்ட்ரோ கடுமையாக எதிர்த்த படிஸ்டாவோடு நெருங்கிய தொடர்பு கொண்ட குடும்பம் இது.
இந்தத் திருமணத்தினால் பிடல் காஸ்ட்ரோவுக்குச் செல்வச் செழிப்பான வாழ்க்கை கிடைத்தது. அரசியல் தொடர்புகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் ஆக முயன்றார் பிடல் காஸ்ட்ரோ.
1949-ல் அவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால் விரைவிலேயே பிடல் காஸ்ட்ரோவின் திருமண வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது 1948-ல் உருவான திருமண பந்தம் 1955-ல் முடிவடைந்து விட்டது. பிடல் காஸ்ட்ரோவுக்குப் போதிய வருமானம் இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். அவரின் மகன் அதன் பிறகு கியூபாவின் அரசியலில் பங்கு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் தொடர்ந்த வாழ்க்கை யில் நாடி நெவுயெல்டா மற்றும் மரியா லபோர்டு ஆகிய இரண்டு பெண்களுடனும் வெவ்வேறு காலகட்டங்களில் பிடல் காஸ்ட்ரோ வுக்குத் தொடர்பு ஏற்பட்டது. இந்த இரண்டு பெண்களுமே அவரின் சித்தாந்தங்களால் கவரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவரின் மூலம் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆனார்.
என்றாலும் பிடல் காஸ்ட்ரோவின் அதிகாரபூர்வ மனைவி (பின்னர் விவாகரத்து செய்து கொண்ட) மிர்டாதான். இவர்களது மகன் டயஸ் பலார்ட் (Diaz Balart) அறிவியலில் சிறந்து விளங்கினார். கியூபாவில் உள்ள ஜுராபுவா என்ற இடத்தில் உருவாகி இருக்கும் அணுசக்தி ஆராய்ச்சி மையம் இவரது மேற்பார்வையில்தான் உருவானது. தொடக்கத்தில் சோவியத் யூனியனின் உதவி இதற்குக் கிடைத்தது. ஆனால் ஒருகட்டத்தில் சோவியத் யூனியனின் அரசியலும் பொருளாதாரமும் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பிடல் காஸ்ட்ரோ அரசு நிதியிலிருந்து பெரும் தொகையை இதற்கு வழங்கினார்.
காஸ்ட்ரோவின் சட்டப்பூர்வமான மகனான இவர் பின்னர் வேறுவிதங்களிலும் செய்திகளில் அடிபட்டார். ஹவானாவில் நடைபெற்ற சிகார் (cigar) திருவிழாவில் பாரிஸ் ஹில்டன் என்ற அரச பரம்பரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இவர் எடுத்துக் கொண்ட செல்பிக்கள் பல யூகங்களுக்கு வழிவகுத்தன.
மாஸ்கோவில் மேற்படிப்பு படித்தபோது தன் பெயரை ஜோஸ் ரால் ஃபெர்ணான்டஸ் என்ற புனைப்பெயரில்தான் படிப்பைத் தொடர்ந்தார். ‘காஸ்ட்ரோ’என்ற பெயர் தனக்குத் தேவையில்லாத கவனத்தையும், சங்கடங்களையும் அளிக்கும் என்ற சந்தேகம்தான் காரணம்.
சமீபத்தில் அவரது அறிவியல் கனவுகள் குறித்து - குறிப்பாக நானோ தொழில்நுட்ப ஆய்வுகள் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது ‘அமெரிக்காவில் இருப்பதுபோன்ற தொழில்நுட்பங்களை கியூபாவில் எதிர்பார்க்கக் கூடாது. அது அவசியமும் இல்லை. விமானங்கள், ராக்கெட்டுகள் போன்றவற்றிற்கான அறிவியல் முயற்சிகள் இங்கு அவசியம் இல்லை.
என்றாலும் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கும் நாடுகளில் தலைசிறந்த நாடாக கியூபாவை அறிவியல் கோணத்தில் கொண்டு செல்ல முயற்சி செய்கிறேன். எங்களால் நாங்கள் நினைக்கும் அறிவியல் பாகங்களை வாங்க முடியவில்லை. எந்த அறிவியல் கருவியையும், பாகங்களையும் ராணுவத்திற்குப் பயன்படுத்த முடியும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக எங்கள் உயிரி தொழில் நுட்பம் வளராமல் இருக்கலாமா?’’ என்று கேள்வி கேட்டார்.
‘‘உங்களுக்கு அரசியல் ஆசை உண்டா, இல்லையா?’’ என்ற கேள்விக்கு அவர் புன்னகையுடன் அளித்த பதில் இதுதான். ‘‘ஒருவேளை என் அடுத்த பிறவியில் அரசியல் ஆசை வரக்கூடும். இப்போதைக்கு விஞ்ஞானியாக இருப்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
இது பிடல் காஸ்ட்ரோவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சிதறல்கள். அவரது அரசியல் போராட்டங்களைப் பார்ப்போம்.
கியூபாவின் தலைநகரான ஹவானா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பிடல் காஸ்ட்ரோவுக்கு அரசியலில் ஆர்வம் அப்போதே கொழுந்து விட்டெரிந்தது.
1952ல் அங்கு நடைபெறுவதாக இருந்த தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால் அதற்குள்ளாக அரசை ராணுவத் தலைவர் படிஸ்டா கைப்பற்றியதால் பொதுத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.

President of Cuba Fulgencio Batista

இதன் விளைவாகவோ என்னவோ ஜனநாயகம் என்பதை ஏற்க மறுத்தார் பிடல் காஸ்ட்ரோ. ஆயுதப் புரட்சிதான் சரியான வழி என்று தீர்மானித்தார். 1953ல் இவரும் இவர் சகோதரர் ரால் காஸ்ட்ரோவும் இணைந்து படிஸ்டா அரசின்மீது தாக்குதல் நடத்த, கிடைத்தது ஆட்சி அல்ல. 15 வருட சிறை தண்டனை. பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. மெக்ஸிகோவுக்கு தப்பிச் சென்றார் பிடல் காஸ்ட்ரோ

.

 அங்கு அர்ஜென்டினாவைச் சேர்ந்த மார்க்ஸியத் தலைவர் சே குவாராவின் நட்பும், ஆதரவும் கிடைத்தது.
‘ஜூலை 26 இயக்கம்’ என்பது பிடல் காஸ்ட்ரோவால் உருவாக்கப்பட்டது. இந்தப் புரட்சி இயக்கம் கியூபாவை ஆண்ட சர்வாதிகாரி படிஸ்டாவுக்கு எதிரானது. சொல்லப் போனால் அவரைப் பதவியிலிருந்து இறக்கு வதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே.
சாண்டியாகோ நகரில் இருந்த அரசின் ராணுவப் பகுதியின்மீது இந்த அமைப்பு தன் முதல் தாக்குதலை நடத்தியது ஜூலை 26, 1953 அன்று. அதனால் இந்தப் பெயர் அதற்குக் கிடைத்து விட்டது. (இந்தத் தாக்குதல் வெற்றிகரமானதாக இல்லை என்பது வேறு விஷயம்).
மெக்ஸிகோவிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. படிஸ்டாவின் ஆட்சியை நீக்குவதற்காக கட்டுப்பாடு நிறைந்த கெரில்லா படையாக இது மாறியது.

படகுகளின் மூலமாக 1956 டிசம்பர் 2 அன்று இந்த இயக்கத்தினர் கியூபாவை அடைந்தனர் இந்த இயக்கத்தைச் சேர்ந்த 82 பேர். பட்டப் பகலில் இவர்கள் வந்து இறங்கியதால், கியூபாவின் விமானப்படை இவர்களின் மீது தாக்குதல் நடத்தியது. தவிர இந்த அணியினர் இரண்டாகப் பிரிந்து விட்டனர்.
உணவுகூட போதிய அளவில் கிடைக்கவில்லை. அரசு ராணுவத்தினரால் பலரும் கொல்லப்பட்டனர். சே குவாரா கழுத்தில் சுடப்பட்டார். என்றாலும் காயம் பட்ட சக கெரில்லா வீரர்களுக்கு அவர் தொடர்ந்து மருத்துவ உதவிகளைச் செய்தார். (அவர் மருத்துவம் படித்தவர்).
புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த 82 பேரில் 12 பேர் மட்டுமே உயிர் தப்பினர். கொல்லப்பட்டவர்களில் பிடல் காஸ்ட்ரோவும் ஒருவர் என்று தவறாக நம்பிய படிஸ்டா அவசரமாக இதை அறிவிக்கவும் செய்தார். பிறகுதான் உண்மை புரிந்தது. இதுதான் கியூபா புரட்சியின் தொடக்க கட்டம். போகப்போக இது வலுவடைந்தது.
சியெரா மாஸ்ட்ரா என்பது கியூபாவின் எல்லைப் பகுதியில் அடர்ந்த காடுகள் அமைந்த மலைத் தொடர். இதைத்தான் தங்களது முக்கிய களமாகத் தேர்ந்தெடுத்தனர் பிடல் காஸ்ட்ரோவும், அவரது புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும். இந்த மலைப் பகுதியில் மறைந்தபடிதான் படிஸ்டாவின் ராணுவ வீரர்கள்மீது சுமார் இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள்.

நடுநடுவே சிறு சிறு ராணுவப் பகுதிகள்மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள ஆயுதத் தளவாடங்களை கடத்தினார்கள். அதே சமயம் தங்களால் தாக்கப்பட்ட ராணுவத்தினருக்கு மருத்துவ உதவிகளையும் இவர்கள் அவ்வப்போது செய்து வந்தனர்.
மறுபுறம் கியூபாவின் காவல்துறை இரும்புக்கரத்தோடு செயல்பட்டது. பிடல் காஸ்ட்ரோவின் இயக்கத்தில் அன்டோனியோ, ஃபிராங் பயஸ் ஆகியோரும் அந்தப் புரட்சிக் குழுவின் அபிமானத்தைப் பெற்ற தலைவர்களாக இருந்தனர். ஆனால் நடந்த தொடர் தாக்குதல்களில் அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுவிட, இயக்கத்தின் போட்டியற்ற சிங்கிள் தலைவரானார் பிடல் காஸ்ட்ரோ.
உள்ளூரில் கடும் தணிக்கை என்பதால் பிடல் காஸ்ட்ரோவின் கருத்துகள் மக்களை அடையவில்லை. எனவே கில்லாடி பிடல் காஸ்ட்ரோ வெளிநாட்டு ஊடகங்களைத் தொடர்பு கொண்டார். நியூயார்க் டைம்ஸ் இதழில் பிடல் காஸ்ட்ரோவின் நேர்முகம் வெளியானதும் அவரது புகழ் மிகவும் பரவியது.
1958ல் பிடல் காஸ்ட்ரோவின் இயக்கம் மேலும் வலிமை பெற்றது. வேறுவழியின்றி ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கியது.
மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளி, சுரங்கம் என்று ஒவ்வொன்றாக புரட்சி இயக்கத்தின் கைவசம் ஆயின.


படிஸ்டாவுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு சரிந்து கொண்டிருந்தது. அவரது கடும் தகவல் தணிக்கைமுறை மற்றும் பிடிக்காதவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் போக்கு ஆகியவை இதற்கான முக்கிய காரணங்கள். இதை அறிந்த அமெரிக்கா படிஸ்டா ஆட்சிக்குத் தாங்கள் அளித்து வந்த ஆயுத உதவிகளை நிறுத்திக் கொண்டது.
எதிர்க்கட்சிகள் பொது வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபட, படிஸ்டா ஆக்ரோஷம் கொண்டார். நாட்டின் எந்தப்பகுதி மக்களெல்லாம் புரட்சியாளர்களுக்கு உதவுகிறார்கள் என்று எண்ணினாரோ அந்தப் பகுதிகளில் எல்லாம் ‘ஆபரேஷன் வெரானோ’ என்று பெயரிட்ட தாக்குதலின் மூலம் பிடல் காஸ்ட்ரோவின் புரட்சி இயக்கத்தை முழுவதுமாக அழிப்பதுதான் அவரது திட்டம்.
ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக படிஸ்டாவால் நினைத்ததை நடத்திக் காட்ட முடியவில்லை. ராணுவத்தினர் இதனால் மனச்சோர்வு அடைய, காஸ்ட்ரோ புது உற்சாகம் பெற்றார். படிஸ்டாவின் ராணுவம் தோல்வியடைய முக்கிய காரணம் அவர்களுக்கு கெரில்லா போர்முறையில் போதிய அனுபவம் இல்லாததுதான்.

பிடல் காஸ்ட்ரோவின் அணியைச் சேர்ந்தவர்களுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு பெருகியது. இது போதாதென்று கியூபா நாட்டு ராணுவத்தைச் சேர்ந்தவர்களிலேயே கணிசமானவர்கள் பிடல் காஸ்ட்ரோவின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மக்களின் ஆதரவை இழந்த படிஸ் டாவை இனி ஆதரிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்து விட்டது. என்றாலும் பிடல் காஸ்ட்ரோவை அது ஆதரிக்கத் தயாராக இல்லை. தனது பிரதிநிதி கான்டில்லோ என்பவரைத் தேர்ந்தெடுத்தது. 



இவர் கியூபாவின் ராணுவத் தளபதியாக ஒரு காலத்தில் இருந்தவர். ஆனால் ராணுவத் தலை வராக இருந்த படிஸ்டா, ஆட்சியைக் கைப்பற்றியபோது இவர் அதற்குத் துணை நிற்கவில்லை.
கான்டில்லோ, பிடல் காஸ்ட்ரோவோடு ஒரு ரகசிய சமாதான உடன்படிக்கைக்கு வந்தார். (அப்போதே அவர் தந்திரமாகச் செயல்பட்டார் என்பதுதான் உண்மை). ‘ஆட்சிக்கு எதிரான செயல்களை பிடல் காஸ்ட்ரோ அணி மேற்கொள்ளக் கூடாது. அமைதியான முறையில் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம். படிஸ்டா நிச்சயம் கைது செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தின் முன்னால் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்படுவார்’. இது கான்டில்லோ அளித்த வாக்குறுதி. ஆனால் நடந்ததோ வேறு.
படிஸ்டாவுக்கு ரகசியத் தகவல் பறந்தது. அவர் சத்தமில்லாமல் தலை மறைவானார் கஜானாவில் இருந்த கோடிக்கணக்கான டாலர்களோடு ஸ்பெயினுக்குச் சென்றார் என்கிறார்கள்.
கான்டில்லோவின் செயல்பாடுகள் இத்துடன் நின்றுவிடவில்லை. நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியான கார்லோஸ் என்பவரை அதிபர் ஆக்கினார். புதிய அரசு ஒன்றையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
பிடல் காஸ்ட்ரோ கடும் கோபம் அடைந்தார். அவரது படை ஹவானாவுக் குள் நுழைந்து கான்டில்லோவைக் கைது செய்தது. இதற்கு ராணுவத்திலேயே இருந்த பிடல் காஸ்ட்ரோ அனுதாபிகள் உதவினார்கள்.
1959 ஆண்டின் தொடக்கத்தில் படிஸ் டாவின் அரசு முழுவதுமாக நீக்கப்பட்டது.
(இதற்குப் பிறகு ஜூலை 26 இயக்கம் தன்னை அரசியல் கட்சியாக மாற்றிக் கொண்டது. ‘கியூபா சோஷியலிஸ்ட் புரட்சியில் இணைந்த கட்சி’ என்று பெயர் வைத்துக் கொண்டது. 1965ல் ‘கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி’ என்று பெயரை மாற்றிக் கொண்டது. இந்தப் பெயர்மாற்றங்களுக்கு முன்பாக நடந்தவற்றை இப்போது பார்ப்போம்).
பிடல் காஸ்ட்ரோ ஊடகங்களுக்கு பல பேட்டிகளை அளிக்கத் தொடங்கினார். தாற்காலிக அதிபராக மேனுவல் உருஷியா என்பவரை நியமித்தார். பிடல் காஸ்ட்ரோவின் பரம சீடர் என்றே இவரைக் கூறலாம்.
Manuel Urrutia Lleó (centre)

ஹவானாவில் உள்ள ஹின்டல் ஹோட்டலைத்தான் பிடல் காஸ்ட்ரோ தனது முதல் அதிகாரப்பூர்வ அலுவலக மாக்கிக் கொண்டார். ‘எனது வீடும் இதுவேதான்’ என்றார் குடும்ப வாழ்வு இல்லாத பிடல் காஸ்ட்ரோ.
நாட்டில் ஊழல் குறைந்தது. கல்வி அறிவு மேம்பட்டது. பிற அரசியல் கட்சிகள் மீது தாற்காலித் தடை விதிக்கப்பட்டது. “விரைவில் பல கட்சித் தேர்தல் நடை பெறும்’’ என்று பொய் வாக்குறுதியை சளைக்காமல் கூறி வந்தார் பிடல் காஸ்ட்ரோ. நாட்டை ஷோசலிசப் பாதையில் திருப்ப முயற்சித்தார்.
புரட்சியை அடக்கும் நோக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களை படிஸ்டா அரசு கொன்று குவித்திருந்தது. இதற்குக் காரணமானவர்களை காஸ்ட்ரோ தண்டிக்கத் தொடங்கினார். வழக்குகள் நடைபெற்றன. அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன. உள்ளூரில் இதற்கு பலத்த ஆதரவு. ஆனால் அமெரிக்க ஊடகங்கள் இந்த வழிமுறையை ஏற்கவில்லை.
“நாங்கள் என்ன அப்பாவி மக்களையா தண்டிக்கிறோம்? அரசியல் எதிரிகளையா பழிவாங்குகிறோம்? கொலைகாரர்களைக் கொல்கிறோம், அவ்வளவுதானே’’ என்று வெளிப் படையாகவே கூறினார் பிடல் காஸ்ட்ரோ.

பின்னர் வெனிசுவேலாவுக்குச் சென்றார். ஒரு பெரும் தொகையைக் கடனாகப் பெறுவதும், பெட்ரோலை வாங்கிக் கொள்ளவும் திட்டமிட்டார். இரண்டுமே நடக்கவில்லை.
கொஞ்சம் சோர்வுடன் பிடல் காஸ்ட்ரோ கியூபாவுக்குத் திரும்பியபோது வேறொரு சிக்கல் காத்திருந்தது. கியூபாவில் உள்ள சூதாட்டக் கிடங்குகளையும் பாலியல் கூடங்களையும் மூடச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ. இதனால் எக்கச்சக்க மானவர்கள் வேலை இழந்து தவிக்கத் தொடங்கினார்கள். பிரதமராக பிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப் பட்டிருந்தவர் ராஜினாமா செய்து சப்தமில்லாமல் அமெரிக்கா சென்று விட்டார்.
கியூபாவின் அதிபராகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே காஸ்ட்ரோ அமெரிக்காவுக்கு வருகை தந்தார்.


ராணுவவீரர் அணிவதைப் போன்ற ஓர் உடை, இடது கையில் ஒரு புத்தகம், சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் - இப்படி பிடல் காஸ்ட்ரோ விமானத்திலிருந்து இறங்கியவுடனேயே பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். “உங்களை மாஸ்கோவின் ஏஜன்ட்டாக நாங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்களுக்கு எதிராகச் செயல் படுபவர்களை சரமாரியாகக் கொல்கி றீர்களே இதை எப்படி ஏற்க முடியும்?’’ என்று கேட்டார் ஒரு பத்திரிகையாளர்.
தாங்கள் தண்டிப்பதும் கொல்வதும் கொலைகாரர்களைத்தான் என்றும் அவர்கள் தனக்கெதிராக மட்டுமல்ல, நாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டவர்கள் என்றும் கூறினார் பிடல் காஸ்ட்ரோ.
“கியூபாவில் உள்ள சர்க்கரைத் தொழில கங்களை தேசியமயமாக்கி விடுவீர்களா? அங்குள்ள அமெரிக்காவின் மூலதனத்தை முடக்கி விடுவீர்களா?’’ என்று பறந்தது மற்றொரு கேள்வி.
பதில் சாமர்த்தியமாக வந்தது. “நீங்கள் நினைப்பது போன்ற கம்யூனிஸ்ட் அல்ல நான். அமெரிக்காவும், கியூபாவும் எதிரிக ளுமல்ல’’ என்று காஸ்ட்ரோ கூற, மகிழ்ந்து போனது யு.எஸ்! . ஆனால் விரைவிலேயே இந்த உறவு முழுவதும் முறிந்து விழுவது போல் சம்பவங்கள் நடந்தன.
மார்க்ஸிய, லெனின் பின்பற்றிய அரசியல் மற்றும் பொருளாதார செயல் முறையைத் தான் தாங்களும் பின்பற்றப் போவதாக காஸ்ட்ரோ அறிவிக்க, அதிருப்தியாளர்கள் உருவாயினர். அமெரிக்காவும் இந்த இயக்கத்துக்கு எதிர்நிலையை எடுத்தது.
கியூபாவில் இருந்த அமெரிக்கர் களுக்குச் சொந்தமான கரும்பு வயல்களை காஸ்ட்ரோ தேசியமயமாக்கியதில்தான் முதல் பெரிய பிளவு தொடங்கியது. காஸ்ட்ரோவின் இதுபோன்ற கம்யூனிஸ நடிவடிக்கைகளை எதிர்த்துக் கணி சமானவர்கள் கியூபாவை விட்டு வெளியே றினார்கள். யு.எஸ்.சென்ற இவர்களில் சிலர், அமெரிக்க விமானங்களில் ஏறி, கியூபாவின்மீது வட்டமடித்தார்கள். ‘இதென்ன விளையாட்டு?’ என்று கியூபா மக்கள் வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதே விமானத்திலிருந்து காகித மழை. அத்தனையும் காஸ்ட்ரோவுக்கு எதிராக அவரை திட்டி எழுதப்பட்ட பிட் நோட்டீஸ்கள்.
1961 ஏப்ரலில் அமெரிக்க உளவுத்து றையான சி.ஐ.ஏ.வினால் பயிற்சி கொடுக்கப் பட்டவர்கள் கியூபாவைத் தாக்கினார்கள். பிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியை அகற்றுவதுதான் இதன் நோக்கம். ஆனால் இவர்கள் வெற்றி நீடிக்கவில்லை. மூன்றே நாட்களில் கியூபா ராணுவம் இவர்களை அடக்கி விட்டது. இந்த அடக்குமுறைக்கு கியூபாவின் அப்போதைய பிரதமரான பிடல் காஸ்ட்ரோ நேரடிப் பொறுப்பேற்றார்.


அமெரிக்க உளவுத் துறையின் மூலம் அமெரிக்க அதிபர் ஜசன்ஹோவர், பிடல் காஸ்ட்ரோவை ஆட்சியிலிருந்து இறக்க பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டினார். ராணுவத்தில் உள்ள புரட்சிக் குழுக்களுக்கு அமெரிக்க உளவுத்துறை கடுமையான பயிற்சி அளித்தது. இதற்குள் அமெரிக்க தேர்தல் 1960-ல் நடைபெற ஜான் கென்னடி அங்கு அதிபர் ஆனார். இவரும் கியூபா முற்றுகைக்கு தனது சம்மதத்தை அளித்தார்.
கியூபாவின் விமான தளங்களை தாக்கத் தொடங்கியது அமெரிக்கா. அது மட்டுமல்ல, அடுத்த சில நாட்களில் ஐரோப்பிய நாடுகள் கியூபாவுக்கு ராணுவ உதவி செய்வதையும் தடுத்துவிட்டது யு.எஸ்!.
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்குமான விரோதம் அதிகமானது. காஸ்ட்ரோவின் அரசு, அமெரிக்கர்களுக்குச் சொந்தமான - எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் தன் வசம் எடுத்துக் கொண்டது.
கோபத்தின் உச்சிக்கே போன யு.எஸ். கியூபாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொண்டது. உடனே, கியூபாவிலுள்ள அத்தனை வியாபாரங்களையும் அரசே சுவீகரித்துக் கொள்ளும் என்று அறிவித்தார் காஸ்ட்ரோ. கியூபாவுடனான தனது தூதரகத் தொடர்புகளை அறுத்துக் கொண்டது யு.எஸ்.
இந்த சமயத்தில் கியூபாவிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் கியூபாவை முற்றுகையிட்டார்கள். இந்த முற்றுகைக்கு அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் ஆசி இருந்தது. என்றாலும் இந்த முற்றுகையை வெற்றிகரமாக முறியடித்தார் காஸ்ட்ரோ.
அமெரிக்க எதிர்ப்பு, பெரும் பாலான ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பின்மை இரண்டையும் கியூபாவால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடிந்ததென்றால் அதற்கு முக்கிய காரணம், சோவியத் யூனியன். மார்க்கெட் விலையைவிட அதிக விலை கொடுத்து கியூபாவிடமிருந்து சர்க்கரையை வாங்கிக் கொண்டது அது. தன்னைப் போலவே கம்யூனிஸ்ட் ஆட்சி நாடு என்பதோடு அமெரிக்காவின் நேரடி எதிரி என்ற பாசம் வேறு. தவிர தடையில்லாத ராணுவ உதவிகளையும் செய்தது சோவியத் யூனியன். தனது இந்த நண்பனிடம் மற்றொரு உதவியையும் கேட்டுப் பெற்றது கியூபா. - அதுதான் சக்திவாய்ந்த ஏவுகணைகள். யு.எஸ். நடுங்கிவிட்டது. ‘உடனடியாக கியூபாவிடமிருந்து ஏவுகணைகளை சோவியத் யூனியன் திரும்பப் பெறாவிட்டால், போர்தான்’ என்றது. சோவியத் மெளனம் காக்க, சில நாட்கள் உலகமே பதட்ட நிலையில் ஆழ்ந்தது - வல்லரசுகளுக்கிடையே அணு ஆயுதப் போர் நடந்துவிடுமோ என்று!
கடைசியில், சோவியத் தனது ஏவுகணைகளைக் கியூபாவிடமிருந்து திரும்பப் பெற்றது. என்றாலும், பல்லாயிரக்கணக்கான தனது ராணுவ வீரர்களை கியூபாவிலேயே தங்க வைத்தது.
“இவ்வளவு தூரம் பகை முற்றிவிட்ட பிறகு, நமது எல்லைக்குள் யு.எஸ்-ஸின் கடற்படைத் தளம் மட்டும் எதற்கு? இது எங்கள் பாதுகாப்பிற்கே அபாயமாயிற்றே’’ என்று முணுமுணுக்கத் தொடங்கினர் கியூபா மக்கள். யு.எஸ். இதைக் காதில் போட்டுக் கொள்ளக் காணோம்.
இதற்கிடையதோன் சோவியத் யூனியன் உடைந்தது. தானே பயங்கரமான பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும்போது அது கியூபாவை எப்படி தாங்கிக் காப்பாற்ற முடியும்? கியூபாவுக்கு அளித்து வந்த பல சலுகைகளை வேறுவழியின்றி நீக்கிக் கொண்டது ரஷ்யா. நாளடைவில் தன் ராணுவத்தையும் திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டது.
சர்க்கரை ஏற்றுமதி மூலம் கிடைத்த பெரும் நிதியை தனது நாட்டின் கல்வி, ராணுவம் மற்றும் உடல் ஆரோக்கியத் துறைகளுக்குச் செலவழித்தது கியூபா. இதன் காரணமாக உலகின் தலைசிறந்த சில பள்ளிகளும், மருத்துவமனைகளும் கியூபாவில் உருவாயின. தென்னாப்ரிக்க ராணுவம் அங்குள்ள கருப்பு மக்களை எதிராகத் தாக்குதல் நடத்தியபோது, கியூபாவின் ராணுவம் கருப்பு மக்களை ஆதரித்தது.
ஆனால் கியூபாவில் பல உரிமைகள் பறிக்கப்பட்டன. அரசைப் பற்றியோ, பிடல் காஸ்ட்ரோ குறித்தோ பொது இடங்களில் விமர்சனம் செய்தால் கைதும், தண்டனையும் நிச்சயம் உண்டு என்ற நிலை இருந்தது. தங்கள் பேச்சுரிமை பறிக்கப்படுவதை விரும்பாத பலரும் அமெரிக்காவுக்குச் சென்றார்கள்.
பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமராக 1959 முதல் 1976 வரையிலும், அதிபராக 1976 முதல் 2008 வரையிலும் பதவி வகித்தவர். 1991-ல் நடைபெற்ற ஒரு நிகழ்வு அவரது தலைமைச் சிறப்பை கேள்விக் குறியாக்கியது.

1991ல் சோவியத் யூனியன் உடைந்தது. கியூபாவின் பெரும்பாலான ஏற்றுமதிகள் சோவியத் யூனியனுக்குதான். இந்த நிலையில் ஏற்றுமதியால் கிடைத்துவந்த நிதி கிட்டத்தட்ட நின்றுவிட்டது. சோவியத் யூனியன் கியூபாவுக்கு அளித்து வந்த பல சலுகைகளை நீக்கிக் கொண்டதோடு ராணுவத்தையும் கியூபாவிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டது.
போதாக்குறைக்கு அமெரிக்கா சமயம் பார்த்து தனது பொருளாதாரத் தடைகளை கியூபாவின் மீது விதித்தது. காஸ்ட்ரோ பதவி இறங்கினால்தான் தடைகளை நீக்கிக் கொள்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தது அமெரிக்கா. 1990-களில் கியூபா மிக ஏழ்மையான நாடாகியது.
அதன்பின் கியூபாவின் பொருளாதாரம் மெள்ள மெள்ள மேலும் வீழ்ச்சி கண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் கடல்வழியாக அமெரிக்காவுக்குப் பிழைப்பைத் தேடி ஓடத் தொடங்கினர். 1980-ல் ஒன்றேகால் லட்சம், 1994-ல் முப்பதாயிரம் என்றெல்லாம் வகை தொகையில்லாமல் அகதிகள் வந்து சேரவே அமெரிக்கா இவர்கள் வருகைக்குத் தடைபோட்டது. தங்கள் நாட்டுக்கு வந்து கொண்டிருந்த கியூபா மக்களை அப்படியே கடலிலேயே வளைத்துப் பிடித்து கியூபாவில் உள்ள தங்கள் கடற்தளத்துக்கு திருப்பியனுப்பத் தொடங்கிது அமெரிக்க ராணுவம்.
இடையே ஏலியன் என்ற ஆறு வயதுச் சிறுவன் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தான். கியூபாவிலிருந்து தப்பிக்கும் எண்ணத்தில் அங்கிருந்து ஏலியனை அழைத்துக் கொண்டு அவன் தாய் படகில் அமெரிக்காவுக்குக் கிளம்பினாள்.
அமெரிக்காவை நெருங்கும்போது படகு மூழ்க, அந்த விபத்தில் அந்த அம்மா இறந்துவிட்டாள். கடற்கரையோரமாக மிதந்து வந்த ஏலியனை சிலர் காப்பாற்றினர். பின்பு அவனை அமெரிக்காவில் வாழும் அவனது உறவினர்கள் அழைத்துச் சென்றார்கள்.
கியூபாவில் வசித்த ஏலியனின் தந்தை கியூபாவுக்குத் தன் மகன் திருப்பி அனுப்பப்பட வேண்டுமெனக் கூறினார். ஏலியனின் அமெரிக்க உறவினர்களோ அமெரிக்காவில்தான் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஏலியன் அங்கேயே இருக்க வேண்டும் என வாதிட்டனர். விஷயம் அரசியலாக்கப்பட்டது.
அமெரிக்க அரசு தலையிடாமல் மவுனம் சாதித்தது. “அமெரிக்க அரசு எங்கள் நாட்டுச் சிறுவனைக் கடத்திச் சென்றிருப்பதாகத்தான் இதற்கு அர்த்தம். ஏலியன் கியூபாவுக்கு அனுப்பப்படாவிட்டால், அமெரிக்கா மீது போர் தொடுப்போம்’’ என்று காஸ்ட்ரோ கர்ஜிக்க, பெரும் விவாதங்களுக்குப் பின் ஏலியன் அவன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அரசியல் ரீதியாக காஸ்ட்ரோ தன் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டாலும் கியூபாவின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமானது. இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் வரவழைப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமா என முயற்சி செய்தது கியூபா. இதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது.
கியூபாவில் கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தலங்கள் பல உண்டு.
ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் என்று ஹவானாவைக் கூறுகிறார்கள். இங்குள்ள தொன்மையான, அழகான மூன்று துறைமுகங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக வந்து செல்கிறார்கள்.
பழைய ஹவானா என்ற பகுதி யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே இருக்கிறது. அங்குள்ள பழங்காலக் கட்டிடங்கள் சரித்திரத்தைப் பறைசாற்றுகின்றன. அழகான ராணுவக் கோட்டை ஒன்றும் இங்குள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டு கட்டிடம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி ஜன்னல்கள் பலரையும் கவர்கின்றன.
வரதெரோ என்பது கியூபாவில் உள்ள கடற்கரை நகரம். அழகான கடற்கரை, இரண்டு குகைகள், ஐந்துக்கும் மேற்பட்ட நவீன ஹோட்டல்கள், அற்புதமான நந்தவனங்கள் நிரம்பிய பகுதி இது. கியூபாவில் உள்ள ட்ரினிடாட் பகுதியும் சுற்றுலாவுக்கு ஏற்றதுதான். இங்குள்ள பிரம்மாண்டமான மாதா கோவிலும், பிளாசா ஸ்கொயரும், அருங்காட்சியகமும் கவரக்கூடியவை.
ஹெமிங்வேயின் பிரபல நூலான `தி ஓல்ட் மேன் ஆன்ட் தி ஸீ’’ என்ற நூலில் மிகச் சிறப்பாக வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் கெயோ கேஹோ என்ற கடற்கரை பகுதி. நாட்டின் முக்கிய நிலப்பகுதியை ஒரு நீண்ட பாலத்தின் மூலம் இணைக்கிறது. மற்றபடி மிக அழகான பள்ளத்தாக்குகள், கோட்டைகள் கொண்டது கியூபா.
ஆனால் சுற்றுலாப் பயணிகளின் மூலம் வந்த நிதி போதுமானதாக இல்லை.இதனிடையே கியூபாவில் மேலும் பல மாறுதல்களைக் கொண்டு வந்தார் காஸ்ட்ரோ. கியூபாவின் வணிகத்தில் இணைந்திருந்த அமெரிக்காவின் பங்கை ஒட்டுமொத்தமாகக் கழற்றி விட்டார். அமெரிக்கா கொதித்தது. கியூபாவுடனான உறவை முழுவதுமாக துண்டித்துக் கொண்டது. அமெரிக்கர்களும் கியூபாவை வெறுக்கத் தொடங்கினர்.
‘ஏழைகளின் சொர்க்க பூமியாக’ விளங்கிய கியூபா பெரும் சிக்கலில் திணறத் தொடங்கியது. அரசு அளிக்கும் ரேஷன் பொருட்களை வாங்க மூச்சு முட்டும் கூட்டத்தில் தினந்தோறும் நின்று வாங்கிக் கொண்டு, தள்ளாடியபடி திரும்பினர். பல குடும்பங்கள் தங்கள் ஷூக்கள், அலமாரிகள் போன்றவற்றை எல்லாம்கூட விற்று குச்சிக்கிழங்கு வாங்கித் தின்ற உயிரைக் கையில் பிடித்துக் கொள்ளத் தொடங்கினர்.
‘என்ன செய்ய? எல்லாவற்றையும் அவர் கண்ட்ரோல் செய்கிறார்’’ என்று சொல்லி தாடியை உருவுவதுபோல சைகையிலேயே காஸ்ட்ரோவை மனத்தாங்கலுடன் குற்றம் சாட்டத் தொடங்கினர் மக்கள். தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இயந்திரங்களை இயக்க வைக்க எரிபொருள் இல்லை. வாங்கவோ, சரியாக விநியோகிக்கவோ வழியில்லாமல் விளைந்த பயிர்கள் எல்லாம் வயல்களிலேயே வாடத் தொடங்கின.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காஸ்ட்ரோ ஒரு முக்கியக் காரணம் என்ற கடும் விமர்சனத்தை முன்வைத்தாலும் அந்தச் சரிவிலிருந்து கியூபாவைக் கடைத்தேற்றவும் அவர் ஒருவரால்தான் முடியும் என்று மக்கள் நம்பினார்கள்.
பிடல் காஸ்ட்ரோ நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு தான் அதுவரை நினைத்துக்கூடப் பார்த்திராத பல விஷயங்களில் வளைந்து கொடுக்கத் தொடங்கினார். ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் கியூபாவில் ஓட்டல்கள் கட்ட அனுமதி அளித்தார்.
கனடா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சில கனிமங்களை எடுத்துக் கொள்ள அனுமதித்தார். ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றுடன் வணிகத்தில் ஈடுபட்டார். முதல் முறையாக அங்கு வருமானவரி அறிமுகமானது.
சோவியத் யூனியனின் மானியங்கள் நின்று போனதில் கியூபாவில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட, நிலைமை மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில் அமெரிக்கா உதவ முன்வந்தது. அதாவது அது கியூபா மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையை நீக்கிக் கொள்ளவில்லை. ஆனால் உணவு, மருந்து போன்றவற்றை நன்கொடையாக அளிப்பதாகச் சொன்னது. அதை ஏற்றுக் கொள்ள கியூபாவின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. 1993 வரை இந்த மறுப்பு தொடர்ந்தது.

ரஷ்யாவுக்குப் பிறகு கியூபாவுக்கு ஆதரவான நாடுகளாக சீனா, வெனிசுவேலா, பொலிவியா ஆகியவை ஓரளவு விளங்கின. முக்கியமாக வெனிசுவேலாவும், பொலிவியாவும் பெட்ரோல் விஷயத்தில் கியூபாவுக்குக் கை கொடுத்தன.
ஒருகட்டத்தில் காஸ்ட்ரோ தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு ஒரு முக்கிய காரணம் அவரது உடல் நலம்.
ஒருவித செரிமான நோய் எனலாம். பெருங்குடலின் உட்பகுதி தொற்றுகளால் பாதிக்கப்பட்டு அங்கே சிறு சிறு பைகள் போன்ற அமைப்புகள் உருவாகிவிட்டிருந்தன.
இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் காஸ்ட்ரோ. இந்த அறுவை சிகிச்சை 2006-ல் நடைபெற்றது. இதைச் செய்து கொள்வதற்கு முன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடமைகளை தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.


உலகெங்கும் பரபரப்பு கூடியது. காஸ்ட்ரோவின் உயிருக்கே ஆபத்து என்று சிலர் கூறினார்கள். வேறு சிலரோ `உடல்நலம் சரியில்லை என்பதே பொய். வேறு ஏதோ காரணத்துக்காக இவர் ராஜினாமா செய்கிறார்’ என்றார்கள். தவிர `காஸ்ட்ரோ கடத்தப்பட்டார்’’ என்ற வதந்தியும் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இதைத் தவிர்ப்பதற்காக வானொலியில் அவர் உரையாற்ற நேர்ந்தது.
பதவியில் இல்லாவிட்டாலும் பல அரசியல் முடிவுகளை காஸ்ட்ரோ எடுத்தார். அவர் விரல் அசைவில்தான் கியூபா அரசு என்ற நிலை தொடர்ந்தது. 2007 பிப்ரவரியில் காஸ்ட்ரோவின் உடல்நலம் முன்னேறி வருகிறது என்ற அறிவிப்பு வந்தது.

அறுவை சிகிச்சை நடைபெற்று ஒருவருடம் கூட முடியாத நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார். ஹவானாவில் நடைபெற்ற கூட்டு சேரா இயக்க மாநாட்டில் கலந்து கொண்டார்.

அமெரிக்க அரசு தொடர்ந்து காஸ்ட்ரோ வைக் கடுமையாக விமர்சித்து வந்தது. ஒருகட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் `ஒருநாள் இறைவன், காஸ்ட்ரோவை எடுத்துச் செல்வார்’ என்றார்.
இவர் எப்போதுதான் சாகப்போகிறாரோ என்கிற தொனி கொண்ட வாக்கியம்!
கடவுள் நம்பிக்கை இல்லாத, காஸ்ட்ரோ இதற்கு அளித்த பதில் சுவாரசியமானது. “இப்போது புரிகிறது. தானே என்னை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அமெரிக்க அரசின் அத்தனை கொலை முயற்சிகளிலிருந்தும் என்னைக் கடவுள் காப்பாற்றி இருக்கிறார்’’ என்றார்.
எத்தனை கொலை முயற்சிகள்? 600-க்கும் அதிகம் என்றது காஸ்ட்ரோ தரப்பு. அமெரிக்கா மறுத்தது. விஷயம் சூடு பிடிக்கவே அமெரிக்கப் பாராளுமன்றம் இதற்காக ஒரு குழுவை நியமித்தது. பிராங்க் சர்ச் என்பவர் இந்தக் குழுவின் தலைவர் என்பதால், இந்தக் குழு சர்ச் குழு என்றே அழைக்கப்பட்டது. இதன் கண்டுபிடிப்புகள் அமெரிக்காவுக்கு அப்படி ஒன்றும் ஆதரவானதாக இல்லை.
திட்டமிட்ட படுகொலைகளுக்கு பின்னணியாக இருக்கும் உயரதிகாரிகளை உளவுத்துறையின் கீழ்மட்ட ஊழியர்கள் சிறிதும் காட்டிக் கொடுக்காமல் இருந்ததோடு அவர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து நழுவச் செய்யும் வகையிலும் செயல்பட்டார்கள் என்றது குழுவின் முடிவு. நிறைய சங்கேத வார்த்தைகள் நிறைந்த தகவல் தொடர்புகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்றும் கூறியது அந்த அறிக்கை


.
1960லிருந்து 1965 வரை காஸ்ட்ரோவை தீர்த்துக் கட்ட அமெரிக்க உளவுத்துறை எட்டு முயற்சிகளைச் செய்தது என்று அறிவித்தது சர்ச் குழு. இதுவே பேரதிர்ச்சியை உண்டாக்கியது. காஸ்ட்ரோவை பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரியான ஃபேபியன் எஸ்கலண்டே என்பவர் அமெரிக்க உளவுத்துறை, காஸ்ட்ரோவை கொலை செய்ய 638 முறை முயன்றது என்றார். கியூபா அரசைக் கவிழ்க்க திட்டமிட்ட இந்தக் கொலை முயற்சிகளுக்கு `ஆபரேஷன் மங்கூஸ்’ என்றும் பெயரிடப்பட்டிருந்ததாம்.
கொலை முயற்சி என்றால் துப்பாக்கியோ, கத்தியோ இல்லை. காஸ்ட்ரோ பயன்படுத்திய சிகாரில் விஷம் கலந்தது ஒருவகை. அவர் ஸ்கூபா டைவிங் எனப்படும் விளையாட்டில் ஈடுபடும் பழக்கம் கொண்டவர். இதற்கான அவர் உடையில் விஷக்கிருமிகள் நிரப்பப்பட்டன. அவரது பால்பாயின்ட் பேனாவில் விஷம் நிரம்பிய ஒரு ஊசி இணைக்கப்பட்டது.
பயன்படுத்தும்போது கிட்டத்தட்ட வலியே இல்லாமல் இந்த ஊசி அவர் விரலைக் குத்த, விஷம் உடலில் கலந்து விடும். ஒருகட்டத்தில் அருங்காட்சியகம் ஒன்றுக்கு அவர் செல்லும்போது அவர் காருக்கு வெடி வைக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாக இவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, காஸ்ட்ரோவின் உயிர் காப்பாற்றப்பட்டது.
அடுத்ததாக அமெரிக்க உளவுத் துறை தன் கைக்குள் போட்டுக் கொண்டது மரிடா லொரென்ஸ் என்பவரை அவர் காஸ்ட்ரோவின் (முன்னாள்) காதலி!
பிடல் காஸ்ட்ரோவின் முன்னாள் காதலி மரிடா லோரென்ஸ் என்பவரையும் தன் வலையில் விழவைத்தது அமெரிக்க உளவுத்துறை. குளிர்காலத்துக்கான க்ரீமை உடலில் தடவிக் கொள்வது காஸ்ட்ரோவின் வழக்கம். அதில் விஷ மருந்தைக் கலந்து அதை காஸ்ட்ரோவின் அறைக்குள் வைத்தார் மரிடா.
ஆனால் இந்தத் திட்டம் கசிந்துவிட, காஸ்ட்ரோ மரிடாவை அழைத்து அவர் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து ‘இப்படியெல்லாம் செய்வதைவிட நீ என்னை நேரடியாகக் கொன்றுவிடு’ என்று கூற, மரிடா உடைந்து அழுதாராம்.
ஆக அமெரிக்காவுக்குக் கடும் ஏமாற்றம். உயிரைத்தான் எடுக்க முடியவில்லை, வேறுவிதத்திலாவது காஸ்ட்ரோவை நிலைகுலைய வைக்கலாம் என்பதற்காக அவரது பிரபல தாடியை அழித்திடும் வகையில் தாலியம் என்ற ரசாயனப் பொருள் அடங்கிய உணவுப் பொருளை வஞ்சகமாக அவரை உண்ண வைத்தார்கள்.
ஊஹூம், நடக்கவில்லை. அவர் வானொலியில் பேச வரும்போது அங்கு போதைப் பொருளை ஆவி வடிவில் பரப்பி, அவர் பேச்சு குழறலாக வெளிப்படச் செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் “கொலை முயற்சிகளிலிருந்து அதிக முறை தப்பிப்பது என்பது ஒரு ஒலிம்பிக் விளையாட்டாக இருந்திருக்குமானால், அதில் எனக்குதான் தங்கப்பதக்கம் கிடைத்திருக்கும்’’ என்றார் காஸ்ட்ரோ.
இந்தக் கொலை முயற்சிகளெல்லாம் “காஸ்ட்ரோவைக் கொல்ல 638 முயற்சிகள்’’ என்ற பெயரில் சானல் 1 என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் தொடராக வெளியிடப் பட்டது.
மீண்டும் அதிபர் ஆவாரா காஸ்ட்ரோ என்ற கேள்வி தொடர்ந்து எழுந்த நிலையில், 2008-ல் அவர் வெளிப்படையான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். “அதிபர் பதவியை இனி நான் ஏற்க மாட்டேன். அந்தப் பதவியில் தொடர்ந்து பல உலக நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அப்படி ஒரு பதவியை வகிக்க முழு உடல்நலமும் இல்லாத என்னால் சம்மதிக்க முடியவில்லை’’ என்றார்.
“தேசம் தொடர்பான அத்தனை முக்கிய முடிவுகளிலும் அண்ணன் காஸ்ட்ரோவை நான் கலந்து ஆலோசிப்பேன்’’ என்றார் ரால் காஸ்ட்ரோ. தான் சொன்னதை அரசு மசோதாகவே அவர் அறிவிக்க, 597 தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.
கியூபா மக்களுடன் தொடர்ந்து மறைமுகமாக உரையாடிக் கொண்டிருந்தார் காஸ்ட்ரோ. நாளிதழ் ஒன்றிலும் தொடர்ந்து தன் எண்ணங்களைப் பதிவு செய்து வந்தார். ‘‘என் வருங்கால உடல்நலம் குறித்துக் கவலைப்படாதீர்கள் மக்களே’’ என்றும் ட்வீட் செய்தார்.
2010ல் நான்கு வருடங்களுக்குப் பிறகு தேசிய பாராளுமன்றத்தில் பேசினார். இரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா அணு ஆயுதங்களை ஏவக் கூடாது என்பதுதான் அவரது பேச்சின் சாரமாக இருந்தது. ஆக உள்நாட்டு விஷயங்களில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றாலும் உலக விவகாரங்களில் அவர் பங்களிப்பு தொடரத்தான் செய்கிறது.
ரால் காஸ்ட்ரோ 2008 பிப்ரவரியில் அதிபராக பொறுப்பேற்றபோது தனது முதல் உரையிலேயே கியூபா மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளில் சில (முக்கியமாக பேச்சுரிமை) தளர்த்தப்படும் என்றார்

fidel castro with world leaders.















ரால் காஸ்ட்ரோ பற்றிய ஒரு சிறு பின்னணி இதோ.

கியூபாவின் அரசியலில் பல வருடங்களாக பங்கு வகித்தவர்தான் இவர். 1950-களி லேயே ராணுவத் தலைவராக விளங்கியவர் என்றாலும் கலகக்காரர். அதாவது அப்போதைய அரசுக்கு எதிரான ராணுவத் தளபதி!. கியூபா கம்யூனிஸ்ட் பார்ட்டியின் மத்தியக் குழுவின் முதன்மை செயலாளராக 2011 முதல் இருந்து வருகிறார்.
காஸ்ட்ரோ கியூபாவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு இவருக்கு மேலும் பல ஏறுமுகங்கள் உண்டாயின. கியூபாவின் அமைச்சர்கள் குழுவின் தலைவராக விளங்கினார். 2006லிருந்து 2008வரை தாற்காலிக அதிபர் பதவியும் இவருக்கு வந்து சேர்ந்தது. முப்படைத் தலைவர் எனற பொறுப்பும் இவரை அடைந்தது.
கியூபாவிலுள்ள பீரான் என்ற இடத்தில் பிறந்தவர் இவர். மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் என்ற பெரிய குடும்பம். மூன்று சகோதரர்களில் ரால் காஸ்ட்ரோதான் இளையவர்.
இளம் வயதிலேயே கம்யூனிஸக் கருத்து களையும், அரசுக்கு எதிரான கருத்துகளை யும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தினால் காஸ்ட்ரோ சகோதரர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்கள். பின்னர் ஜெசூட் (கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு) பள்ளியில் படித்தார்கள். ரால் காஸ்ட்ரோ படிப்பில் அவ்வளவு புத்திசாலி என்று சொல்ல முடியாது. (ஆனால் காஸ்ட்ரோ சிறந்த மாணவர். நிறைய மதிப்பெண்கள் பெறுபவர்).
ரால் காஸ்ட்ரோவுக்கு மிக இளம் வயதிலிருந்தே சோவியத் பாணியில் அமைந்த கியூபா கம்யூனிஸக் கட்சியில் ஈடுபாடு இருந்தது. இரு சகோதரர்களுமே மாணவப் பருவத்திலேயே அரசுக்கு எதிர்ப்பைக் காட்டும் ஊர்வலங்களில் மிக ஆக்ரோஷமாக ஈடுபட்டனர்.
1953-ல் சோவியத்துக்குச் சென்றிருந்த போது அந்த நாட்டின் உளவுத்துறை ஏஜென்ட் நிகோலாய் லியோனோவ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இது பின்னர் கியூபா புரட்சியில் அவருக்கு உதவியது. காலப்போக்கில் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் லியானோவ்தான் சோவியத்தின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டார்.
1953ல் ‘ஜூலை 26 இயக்கக் குழுவில்’ ரால் உறுப்பினராக இருந்தார். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு 22 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
கியூபாவின் அதிபரான ரால் காஸ்ட்ரோவின் ஃப்ளாஷ்பேக்கை மேலும் சிறிது பார்ப்போம்.
1958 ஜூன் 26 அன்று ரால் காஸ்ட்ரோவின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஓர் அமெரிக்க சுரங்க நிறுவனத்தில் (கியூபாவில் அமைந்தது) பணி புரிந்த பத்து அமெரிக்கர்களையும், இரண்டு கனடா நாட்டினரையும் கடத்தினார்கள். அதற்கு அடுத்த நாளே கடற்பகுதியில் உலவிய 24 அமெரிக்கர்களையும் கடத்தினார்கள். இவர்கள் அனைவரும் பணயக் கைதிகளானார்கள்.
இது பரபரப்புச் செய்தியாகி உலக நாடுகளை கவனிக்க வைத்தது. ஆனால் இது போன்ற செயல்களை பொது மக்களேகூட விரும்பவில்லை. எனவே பின்னர் பணயக் கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டனர்.
பின்னொரு காலத்தில் பிடல் காஸ்ட்ரோவின் ஆராக்கியக் குறைவு காரணமாக ரால் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபரானது அந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியானதுதான். அதிபருக்கு இயலாமை ஏற்பட்டால் துணை அதிபர்தான் அந்தப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.
பிடல் காஸ்ட்ரோவின் உடல் நலம் போதிய அளவு முன்னேற்றமடையவில்லை. “2008 பிப்ரவரியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை’’ என்று அவர் அறிவித்து விடவே, அந்தத் தேர்தலில் ரால் காஸ்ட்ரோ நாட்டின் அதிகாரப்பூர்வ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2013-லும் அவரே மீண்டும் அதிபராக தேர்வு பெற்றார்.


ஆக அவர் இப்போது இரண்டாம் முறையாக அதிபர். மூன்றாம் முறையும் ரால் காஸ்ட்ரோவே இந்தப் பதவியில் தொடர்வாரா? மாட்டாராம். 2018 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ரால் காஸ்ட்ரோ.
மனித உரிமைகளை கியூபா அரசு அடிக்கடி மீறுகிறது என்ற குற்றச்சாட்டை பல அமைப்புகள் நீண்டகாலமாக முன்னிறுத்துகின்றன. “எந்த வகையான அரசியல் எதிர்ப்பையும் கியூபா அரசு சகித்துக் கொள்வதே இல்லை’’ என்ற எண்ணம் பரவலாகி வருகிறது. ஐரோப்பிய யூனியன் இது தொடர்பாக ஓர் எச்சரிக்கையை விடுத்தது. பதிலுக்கு கியூபா “எங்கள்மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடை கூட மனித உரிமை மீறல்தான்’’என்கிறது.
உலகெங்கும் எடுத்த கணக்கெடுப்பின்படி (சீனாவுக்கு அடுத்ததாக) மிக அதிக அளவில் பத்திரிகையாளர்களைக் கைது செய்த அரசு கியூபாதான்.

கியூபாவின் சிறைகள் எண்ணிக்கையிலும் சரி, அளவிலும் சரி பிரம்மாண்டமானவை. 40 மிக அதிக பாதுகாப்பு கொண்ட சிறைகள், 30 ஓரளவு பாதுகாப்பு கொண்ட சிறைகள் என்று எண்ணிக்கை விரிகிறது. கியூபா அளவுக்கு பரப்பைக் கொண்ட நாட்டுக்கு இது அதிகம்தான்.
எல்லா அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கோரி வருகிறது ஐரோப்பிய யூனியன். 2010 ஜூலை அன்று தங்கள் நாட்டில் 167 அரசியல் கைதிகள் உள்ளனர் என்று கூறியது கியூபாவில் உள்ள மனித உரிமைக் குழு. இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமற்றது என்பதால் இந்த எண்ணிக்கையை முழுவதுமாக ஏற்க உலக அமைப்புகள் தயாராக இல்லை.
அமெரிக்கா மட்டும் கியூபாவுக்கு விதித்த வர்த்தக தடையை முழுவதுமாக நீக்கி விட்டால், கியூபா நிமிர்ந்து விடும் என்ற நிலை பல ஆண்டுகளாக நிலவுகிறது. இதற்கு உதவுமாறு மெக்ஸிகோ, கொலம்பியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளை கேட்டுக் கொண்டது கியூபா.
ஆனால் கியூபாவுக்கு உதவினால் அது காஸ்ட்ரோவை (பிடல்) பலப்படுத்திவிடும் என முன்பு அஞ்சியது அமெரிக்கா. “கியூபா முதலில் அரசியல் கைதிகளை விடுவிக்கட்டும். வெளிநாட்டு முதலீடுகளைத் தடையின்றி அனுமதிக்கட்டும். அதற்குப் பிறகு நாங்கள் கியூபாவுடன் வணிகத்தைத் தொடங்குகிறோம்’’ என்று கிளிண்டன் காலத்திலிருந்தே கூறிவருகிறது அமெரிக்கா.
கடந்த பல மாதங்களாக பிடல் காஸ்ட்ரோ குறித்து வதந்தி ஒன்று வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. `பிடல் காஸ்ட்ரோ’ இறந்து விட்டார். ஆனால் அதைத் வெளியிடாமல் கியூபா அரசு மறைத்துக் கொண்டிருக்கிறது’.
உள்ளூர்வாசிகளில் பலரும் கூட இதை நம்பத் தொடங்கி விட்டார்கள் என்றால் அதற்குப் பின்னணி உண்டு. ஒன்று பிடல் காஸ்ட்ரோ கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இரண்டு, ஒன்பது மாதங்களாக அவரை எங்குமே காணமுடியவில்லை.
இந்த நிலையில்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான `கிரான்மா’ பிடல் காஸ்ட்ரோவின் பல புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. அவை சமீபத்தில்தான் எடுக்கப்பட்டன என்பதற்கு ஆதாரமாக சமீப செய்திகள் அடங்கிய செய்தித் தாளை அவர் படிப்பதுபோன்ற புகைப்படங்களும் அவற்றில் இடம் பெற்றுள்ளன.
ஹவானா பல்கலைக்கழகத்தின் மாணவர் கூட்டமைப்பின் தலைவரான ராண்டி பெர்டோமோ கார்ஸியா சமீபத்தில் தான் பிடல் காஸ்ட்ரோவை மூன்று மணிநேரம் சந்தித்து உரையாடிவிட்டு வந்ததாக அறிவித்திருக்கிறார். “மிகவும் உயிர்த் துடிப்புடன் செயல்படுகிறார். விளையாட்டிலிருந்து வானியல் வரை, தினசரி உடற்பயிற்சிகளிலிருந்து உலக நடப்புகள் வரை அனைத்தையும் பேசுகிறார்.
ஆப்பிரிக்காவுடன் கியூபா கொள்ள வேண்டிய உறவு, எபோலாவுக்கு எதிராக கியூபா நாட்டு மருத்துவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்று எல்லாமே எங்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன’’ என்கிறார் பெர்டோமோ.

என்றாலும் `பிடல் காஸ்ட்ரோ’ உயிருடன் இருப்பது உண்மை. ஆனால் மூளைச் செல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டிமென்ஷியா என்ற நிலையால் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். அவரால் ஆரோக்கியமாகப் பேச முடியுமென்றால் அதை எப்போதோ மக்களுக்குக் காட்டி சந்தேகத்தைப் போக்கியிருப்பார்கள்’’ எனும் வதந்தி கொடிகட்டிப் பறக்கக் தொடங்கி இருக்கிறது.


கியூபாவைப் பற்றிய சில சுவாரசியத் துணுக்குகள்



கியூபாவை உள்ளூர்வாசிகள் ‘எல்கோ கேட்ரீலோ’ எனவும் அழைப்பதுண்டு. இதன் அர்த்தம் முதலை. கியூபாவின் வடிவம் அத்தகையது என்பதால் இந்தப் பெயர்.
கியூபாவின் தேசியப் பறவை கியூபன் ட்ரோகோன். இதன் இறக்கைகள் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய வண்ணங்களைக் கொண்டவை. இதே வண்ணங்கள் கொண்டதுதான் கியூபாவின் தேசியக் கொடி.
பிரபல ஆங்கில இலக்கியவாதி எர்னட்ஸ்ட் ஹெமிங்வேயின் மிகச் சிறந்த படைப்பு ‘’தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸி’’. இதை எழுதத் தூண்டுதலாக அவருக்கு அமைந்த இடம் கோஹிமர். இது கியூபாவின் தலைநகர் ஹவானாவின் புறநகர்ப் பகுதியில் உள்ளது.
பீட்டில்ஸ் இசைக் குழுவில் ஒருவரான ஜான் லென்னனுக்கு இங்கு சிலை உண்டு. வரடெரோ என்ற பகுதியில் வெண் மணல் கடற்கரைகள் மிகப் பிரபலம். சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தேர்வு இப்பகுதிகள்.

இசைக்குப் பெயர்பெற்ற நாடு கியூபா. சல்சா, மாம்போ போன்ற நடன இசைப் பிரிவு கள் கியூபாவைத் தாயகமாகக் கொண்டவை. அவர்கள் இசை மிக வித்தியாசமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அவை ஆப்ரிக்க மற்றும் ஸ்பானிஷ் தாளக்கட்டைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதுதான்.
ஜமைக்காவுக்கு சமீபத்தில் சென்றிருந்த போதுதான் அமெரிக்க அதிபர் ஒபாமா இப்படிக் கூறியிருக்கிறார். ‘’ஐம்பது வருடங் களாக ஒரு செயல்முறை ஒத்துவரவில்லை என்றால் புதியதாக எதையாவது முயற்சிப்பதுதானே இயல்பானது?’’.
அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் உள்ள உறவைத்தான் இப்படிக் குறிப்பிட்டி ருக்கிறார் ஒபாமா. அமெரிக்க கண்டத்தின் நாடுகளுக்கான மாநாடு ஒன்றில்தான் ஒபாமாவும் ரால் காஸ்ட்ரோவும் சந்திக்க நேர்ந்தது.அந்த மாநாட்டின் வேறொரு நிகழ்வாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, கியூபாவின் வெளிநாட்டு அமைச்சர் ப்ரூனோவுடன் பேசியது மற்றொரு புதிய ஆரம்பம்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை பயங்கரவாத நாடுகள் என்ற ஒரு பட்டியலை அது எப்போதும் வைத்திருக்கும். இப்போது அந்தப் பட்டியல் சுருங்கி விட்டது. ஈரான், சூடான், சிரியா, கியூபா ஆகிய நான்கு நாடுகள்தான் அதில் உள்ளன. இதிலிருந்து கியூபா நீக்கப்பட வாய்ப்பு கூடி இருக்கிறது.
கியூபா மற்றும் அமெரிக்க அதிபர்கள் கடந்த ஐம்பது வருடங்களில் சந்தித்தது மிகக் குறைவு. 2013ல் நெல்சன் மண்டேலாவின் இறுதி ஊர்வலத்தில் சந்தித்தபோது ஒபாமாவும், காஸ்ட்ரோவும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.

அதையே அப்போது அந்த இரு நாடுகளின் பெருவாரியான மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
விரைவில் இந்த இருநாடுகளும் தூதரக அலுவலகங்களை மற்ற நாட்டில் தொடங்கவிருக்கும் என்கிறார்கள்.
மதத்தைப் பொறுத்தவரை கூட கியூபா வில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைக் காண முடிகிறது. மதங்களுக்கு எதிரான அரசாகத்தான் கியூபா இருந்து வந்திருக் கிறது. ஆனால் 1991ல் சோவியத் யூனியன் சிதறியபின் மதங்களுக்கான தனது எதிர் நிலையை குறைத்துக் கொண்டிருக்கிறது கியூபா அரசு. என்றாலும்கூட அரசு வேலை களுக்கு விண்ணப்பிக்கும்போது உங்கள் மதம் எது என்பதை நீங்கள் குறிப்பிட்டி ருந்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப் படவே வாய்ப்பு அதிகம்.
கியூபாவில் வசிப்பவர்களில் 60 சதவீதம் பேர் தங்களை கத்தோலிக்கர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். இவர்களில் பலரும் மாதா கோவில்களுக்குச் செல்வதில்லை என்பது வேறு விஷயம். இந்த நிலையில் கியூபாவில் கத்தோலிக்கப் பிரிவின் ஒரு புதிய வடிவமாகத் தோன்றிய சன்டேரியா என்ற பிரிவு (இது கத்தோலிக்கம், யோருபா ஆகிய இருமதங்களும் இணைந்த கலவை எனலாம்) மெல்ல மெல்ல பலம் பெற்று வருகிறது.
இந்தப் பிரிவில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாம். பெண்கள்கூட பாதிரி ஆகலாம். இதுபோன்ற பாதிரியார்கள் திருமண வாழ்வு குறித்து கூட கவுன்சிலிங் செய்யலாம். பகிரங்கமாகத் தங்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று அறிவித்துக் கொள்பவர்கள்கூட இந்த மதத்தில் தாராளமாக உறுப்பினர் ஆகலாம்!
ஐந்து தலைமுறை பகைமையை அமெரிக்காவும், கியூபாவும் நீக்கிக் கொள்வதால் கியூபாவுக்கு சில உடனடி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கியமாக கியூபாவில் சுற்றுலாப் பயணிகளால் கிடைக்கும் நிதி என்பது இந்த வருடமே 17 சதவீதம் அதிகமாகுமாம்.
சென்ற வருடம் கியூபாவின் பொருளாதாரம் வெறும் 1.3 சதவீதம்தான் அதிகரித்தது. ஆனால் அமெரிக்காவுடன் நேசப்போக்கை கடைப்பிடிப்பதால் இரண்டரை பில்லியன் டாலர் முதலீடு கியூபாவில் இந்த ஆண்டு செய்யப்படும் என்ற நம்பிக்கையும் தோன்றி இருக்கிறது.
ஆனால் நிதி உதவிகள் எல்லாம் கூடவே நிபந்தனைகளுடன்தான் வரும். இவை ரால் காஸ்ட்ரோவுக்கு புதிய சங்கடங்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அவரது கொஞ்சநஞ்சம் இருக்கும் சோஷலிஸ செயல் முறைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டி வரலாம். இலவசக் கல்வி, இலவச ஆரோக்கியம் என்றெல்லாம் அங்குள்ள சில பொதுநலத் திட்டங்கள் கேள்விக்குறியாகிவிட வாய்ப்பு உண்டு.


thanks to 
(wikipedia & the hindu )

KARTHIKKN



No comments:

Post a Comment

Ads Inside Post