Tuesday 10 May 2016

நீங்கள் பொக்கிஷமாக நினைக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள:




திருமணத்திற்கு பிறகு ஓர் ஆண்டு காலம் வரை தம்பதிகளுக்கு நடுவில் அன்னியோநியமும், காதலும் அளவுக்கு அதிகமாக இருக்கும். அவர்கள் வசிக்கும் வீடே அன்பால் காதலால் நிறைந்திருக்கும். ஆனால் உங்கள் வீடு குழந்தைகளால் நிறைந்திருக்கிறது என்றால், வீட்டின் ஒட்டு மொத்த சூழலும் மாறிவிடும். அப்போது வீட்டில் இருந்த சந்தோஷம் மேன்மேலும் அதிகரித்து ஆனந்தம் பெருகும். குழந்தைகள் துருதுருவென செய்யும் சேட்டைகளால் தான் நம் வீட்டிற்கே வெளிச்சம் உண்டாகிறது.

அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், மன நிறைவையும் மன நிம்மதியையும் அளிக்க தவறாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வளர்க்கவும் தங்களின் பெற்றோர்களின் உதவியை நாடியது எல்லாம் அந்தக் காலம். பேரக் குழந்தைகளை நல்ல படியாக பார்த்துக் கொண்டு, அவர்களிடம் அதீத அன்பை பொழிவதே தாத்தா பாட்டிமார்களின் தலையாய கடமையாக இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. இன்றைய பெற்றோர்கள், தங்கள் வேலைகளில் எப்போதும் மூழ்கி போய்விடுவதால், தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

அதனால் இந்த பிரச்சனையை போக்க, இன்றைய பெற்றோர்கள்  குழந்தை பராமரிப்பு பற்றிய சில டிப்ஸ்களை நாங்கள் அளிக்க உள்ளோம்.
குழந்தைகளுக்கான முகாம்கள் எங்கேனும் நடந்தால் அனைத்து பெற்றோர்களும் கலந்து கொள்வது வழக்கம். பெரும்பாலும் முகாமில் அனைத்து பெற்றோர்களும் கூறும் ஒரே  புகார் தங்கள் குழந்தையை தம்மால் கட்டுபடுத்தவே முடியவில்லை என்பது தான்.

இன்றைய உலகம் ஒரு சுயநலம் மிக்க உலகமாகவே மாறிவிட்டது. பெரும்பாலானோர் அவர்களை பற்றி மட்டும் தான் எண்ணுகிறார்கள். ‘தான்என்று வரும் போது, தங்களுக்கு பிடித்தவர்களை பற்றி கூட அவர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் குழந்தை என்று வந்துவிட்டால், அவர்களை தவிர இந்த உலகத்தில் முக்கியமானது என்று வேறு எதுவுமே இல்லை. அவர்கள் நலனுக்காக தான் இப்படி வேலை செய்கிறேன் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல. உங்கள் குழந்தைக்கென எப்போதும் நீங்கள் இருக்க வேண்டும். இது அவர்களுக்கும் உங்களுக்குமான இறுக்கத்தை அவர்களின் மழலை பருவத்தில் இருந்தே அதிகரித்துவிடும்.

பணத்தின் அருமை மற்றும் முக்கியத்துவத்தை பற்றி ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு நாணயம் மற்றும் ரூபாயின் மதிப்பைப் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வயதை அடைந்ததும் தான் உண்ணும் சாக்லெட்டின் விலையை பற்றி கண்டிப்பாக குழந்தை தெரிந்து கொள்ள வேண்டும். இப்போதே இதை பற்றி உங்கள் குழந்தை கேட்கிறதா?


ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் குறைந்தது 3 மணிநேரமாவது ஒன்றாக செலவிட வேண்டும். எவ்வளவு வேலை பளு இருந்தாலும் கூட, இதனை செய்ய தவறக் கூடாது. இன்றைய தாய்மார்களும் தந்தைமார்களும் தங்கள் குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையின் அடிப்படையை பற்றி குழந்தைக்கு சொல்லி கொடுக்க தாய் மற்றும் தந்தை என இருவருமே தேவை.

இன்றைய தலைமுறை பெற்றோர்கள் பார்ட்டிகளுக்கு செல்லவும், நண்பர்களுடன் பொழுதை கழிக்கவும் அதிகமாக விரும்புகின்றனர். இருப்பினும் பார்ட்டிக்கு செல்லும் போது, குழந்தைகள் நிறைந்துள்ள பார்ட்டிகளுக்கே செல்ல வேண்டும். அதனால் மற்ற குழந்தைகளுடன் எப்படி பழகி நண்பர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

பெரிதாக ஆன பின்பு என்னவாக ஆகப்போகிறாய் என்று உங்கள் 3 வயது குழந்தையை கேட்கும் போது, அதற்கு அவர்கள் அளிக்கும் பதில் கண்டிப்பாக உங்கள் முகத்தில் புன்னகையை உண்டாக்கும். இன்றைய தலைமுறை தாய்மார்களுக்கு குழந்தை வளரப்பதர்கான முக்கிய டிப்ஸ் இதுஉங்கள் குழந்தையை பெரிதாக கனவு காண விடுங்கள். அந்த கனவு நிறைவேற அவர்களுக்கு அனைத்து விதத்திலும் பக்கபலமாக இருங்கள்.


குழந்தைகளை ஊக்கப்படுத்துவது நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான குழந்தை வளர்ப்பு டிப்ஸாகும். இன்றைய பெற்றோர்கள்  தங்கள் குழந்தையை அதன் சின்ன வயதிலுருந்தே ஊக்கப்படுத்த தொடங்க வேண்டும். இந்த ஊக்கம் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களின் சுய மதிப்பை வளர்த்துவிடும். குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்திறமையைப் புரிந்து கொள்ளச் முயற்சி செய்யுங்கள். சிறு செயல்களை கூட பாராட்ட வேண்டும்  இவ்வளவு தான் குழந்தை வளர்ப்பு என்றில்லை. இன்னமும் கூட பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்கள் இருக்கத் தான் செய்கிறது





உங்கள் குழந்தை பள்ளியில் இருந்து வந்தவுடன் ஷூவைத் தூக்கி எறிகிறதா? கண்ணில் படுவதை எல்லாம் எட்டி உதைக்கிறதா? என்ன கொடுத்தாலும் சாப்பிட மறுத்து அடம்பிடிக்கிறதா? சந்தோஷப்படுங்கள்! ‘இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது?’ என்று எரிச்சலாகிறீர்களா? இதில் எரிச்சலாக என்ன இருக்கிறதுசொல்லுங்கள்! குழந்தை என்றால் அப்படித்தான் சுட்டித்தனம் செய்யும். உங்கள் குழந்தை மட்டுமல்லஎல்லா குழந்தைகளும் இப்படிச் சேட்டைக்காரர்கள்தான். அதுதான் குழந்தை! ஆனால், 90% மேலான பெற்றோர்கள், அந்தக் குழந்தைத்தனத்தைப் புரிந்துகொள்ளாமல், அவர்களைத் திருத்துவதாக நினைத்து மிரட்டுவது, அடிப்பது, தண்டனை கொடுப்பது என்ற பெயரில், அவர்களின் திறமைகளை, உணர்வுகளை, நல்ல எதிர்காலத்தை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்கள்.
இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி பல கனவுகள் காண்கிறார்கள். `என் பிள்ளை டாக்டராக வேண்டும்; இன்ஜினீயராக வேண்டும்என்று நினைக்கிறார்களே தவிர, அவனை நல்ல மனிதனாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கும்போது. ஆனால், வளர்ப்பு முறைதான் அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதை தீர்மானிக்கிறது. சில பெற்றோர், குழந்தையின் ஒவ்வொரு அடியையும் தங்கள் விருப்பப்படியே நிகழ்த்துவார்கள். சிலரோ, சுதந்திரம் என்ற பெயரில் கண்காணிப்பை விட்டுவிடுவார்கள். இந்த இரண்டு அணுகுமுறைகளுமே தவறு. அளவான சுதந்திரமும், அவசியமான கண்டிப்பும் இணையும்போதுதான், குழந்தையை நல்லவிதமாக வளர்த்தெடுக்க முடியும்.
.
குழந்தையின் நடவடிக்கைகளை சரியாகப் புரிந்துகொள்வது, நல்ல பெற்றோருக்கான அம்சம். ஒரு குழந்தை கையில் எது கிடைத்தாலும் தூக்கி எறிகிறது என்றால், அவனுக்கு ஈட்டி எறிதல், பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுக்கான திறமையும், ஆர்வமும் இருக்கலாம். சில குழந்தைகள் கையில் எது கிடைத்தாலும் எடுத்து சுவரில், தரையில் என கிறுக்கிக்கொண்டிருக்கும். அவர்களுக்கு இயல்பாகவே ஓவியத்திறமை அமையப் பெற்றிருக்கலாம். ஆனால், அப்படி அதன் ஆர்வத்தையும், திறனையும் கவனிக்காமல், அதில் தொடர்ந்து ஊக்குவிக்காமல்டாக்டர், இன்ஜினீயர் என்று பொருளீட்டுவதை முன்னிலைப்படுத்திதான் அதன் எதிர்காலத்தை தயார் செய்ய நினைக்கிறார்கள் பெற்றோர்கள் பலரும். இப்போது ரியாலிட்டி ஷோக்களின் விளைவாக, நடனமே வராத குழந்தையை டான்ஸ் கிளாஸ் அனுப்புவது, ஆர்வமில்லாத பிள்ளையை பாட்டு கிளாஸ் அனுப்புவது என்று படுத்தும் பெற்றோர்களும் பெருகிவருகிறார்கள்.
குழந்தை எதற்கெடுத்தாலும் பொய் சொல்வதாகச்  சொல்வார்கள் அதற்குக் காரணம் தேடியபோது, குடும்பமே விடையாக இருக்கலாம். வீட்டுப் பெரியவர்கள் குழந்தை முன் பொய் பேசியது ஒரு காரணம். ‘தண்ணியைக் கீழே கொட்டினியா?’ என்ற அதட்டலுக்கு, ‘நான் இல்லம்மா. அப்பா கொத்தித்தாங்கஎன்று அது மழலையில் பொய் சொன்னபோது, ‘எவ்ளோ சாமர்த்தியமா பேசுது பாருங்க!’ என்று அதன் பொய்யை வீடே கொண்டாட, அதுக்குப் பொய் பிடித்துப்போய்விட்டது. எனவே, குழந்தைகளின் தவறுகளை ஒருபோதும் ரசிக்காதீர்கள்; கண்டியுங்கள்.
குழந்தைகளின் முதல் ரோல்மாடல் பெற்றோர்கள்தான். எனவே, அவர்கள் முன் நல்ல பெற்றோராக, நல்ல மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள். ‘குழந்தைதானே, அதுக்கு என்ன தெரியப்போகுது?’ என்று அதன் முன் பேசக்கூடாதவற்றை பேசாதீர்்கள்; செய்யக்கூடாதவற்றை செய்யாதீர்கள். குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். பென்சில், பாக்ஸ், ஷூ என்று அதற்கு அவசியத் தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கும்போதும், அந்தப் பொருளின் விலை, அதை உருவாக்கத் தேவைப்படும் உழைப்பு என்று அதன் மதிப்பை உணர வையுங்கள்.
இன்றைய குழந்தைகளிடம் தலைமுறை இடைவெளி காரணமாக, ஒரு அதிகப் பிரசங்கித்தனம் இருக்கிறது. ஆனால், ‘நாம நம்ம அப்பா, அம்மாகிட்ட இருந்த மாதிரியா இருக்குதுங்க? இதுங்க எல்லாம் அடங்கவேஅடங்காதுங்க!’ என்று அதையேடேக்கன் ஃபார் கிரான்டட்ஆக, அவர்களின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். நேரம் ஒதுக்கி, குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுங்கள். ஒரு விதை, நன்றாக முளைத்துச் செழிப்பதற்கும், நோஞ்சானாக மடிவதற்கும் காரணம்அதன் வளர்ப்பும், வீரியமும்தான்.
குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைக்காமல் சுதந்திரமாக விளையாட அனுமதியுங்கள். கல், மண், செடி என்று இயற்கையின் மடியில் இளைப்பாறவிடுங்கள். ‘அழுக்காயிடும், இன்ஃபெக்ஷனாயிடும்என்று பொத்திப் பொத்தி வளர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி எங்கிருந்து கிடைக்கும்? நாளை உங்கள் குழந்தை இந்த உலகத்தை, இந்த மண்ணை, இந்தக் காற்றை, இந்த தூசை எல்லாம்தான் சந்திக்கவிருக்கிறது, இதையெல்லாம் தாண்டிதான் சாதிக்கவிருக்கிறதுமறவாதீர்கள்
கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் கலையை உங்கள் குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள். குழந்தைகளின் அடம், பிடிவாதத்தை முளையிலேயே கிள்ளுங்கள். நான்கு வயதுப் பையன் ஒருவன், என்ன சொன்னாலும் கேட்காமல், வாயில் கை வைப்பதும், மூக்கை நோண்டுவதுமாக ஏதேதோ செய்து அடம்பிடித்துக்கொண்டிருந்தான். ‘அப்படியெல்லாம் செய்யக்கூடாதுஎன்று நான் சொன்னபோது, ஆற்றாமையில் தரையில் புரண்டு அழுதான். இதுவே அவன் வீடாக இருந்திருந்தால், அவன் கேட்டது கிடைத்திருக்கும்; நினைத்தது நடந்திருக்கும். ஆனால், நான் அவன் அடத்துக்கு வளையாமல் இருக்க, அதுதான் அவன் மூர்க்கத்தனத்துக்குக் காரணம் என்பது புரிந்தது. ‘இவ்வளவு அடம், இவனுக்கு எங்கயிருந்து வந்தது?’ என்று நான் கேட்க, அதை அவனிடம் வளர்த்துவிட்டிருந்த அவன் பெற்றோர் மௌனமாக நின்றார்கள்.
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஒரு நல்ல பாலம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும். முன்பு கூட்டுக்குடும்பமாக இருந்தபோது, யாராவது ஒருவர் குழந்தையைக் கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். அதனால் குழந்தைகள் தவறான வழிகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டார்கள். முன்பெல்லாம் டி.வி-யில் ஒரு முதலிரவு காட்சியோ, கற்பழிப்பு, ஆபாசக் காட்சியோ வந்தால் அருகில் உள்ள குழந்தையின் கண்களை மூடிப் பார்க்க விடாமல் செய்வார்கள் பெரியவர்கள். ஆனால், இன்றோ குழந்தைகள் கையில் ரிமோட்டை கொடுத்துவிட்டு தங்கள் வேலையை செய்யப் போய்விடுகிறார்கள். சிறுவயதில் குழந்தைகள் தடம்புரள விரிந்திருக்கும் வாய்ப்புகளில் இருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியது, பெற்றோரின் கடமையே!
பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்:


பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இரண்டு முதல் மூன்று வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றும், வருங்காலத்தில் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ குறிப்பிடுவது, மனதில் பதிய வைப்பது தவறு.

குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.

குழந்தைகளுக்கு சொன்னால் புரியாது என்னும் மனோபாவத்தை தவிர்த்து, சிறுவயது முதலே நல்ல பழக்கங்களை பழக்கவேண்டியது நம்முடைய கடமையாகும்.
தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.

மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.

குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
குழந்தைகளைக் கவரும் பொருட்கள்  பொம்மைகள்… கவனம்!




குழந்தைகளின் முதல்  நண்பன் பொம்மை.  குழந்தைகளுக்குப் பொம்மைகளோடு விளையாடுவதும்  உறவாடுவதும் அலாதியான ஆனந்தம். பார்க்கும் ஒவ்வொரு பொம்மையையும் வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிக்காத குழந்தைகளே இல்லை. தூங்கும்போது, குளிக்கும்போது என நாள் முழுக்க பொம்மைகளை உடன் வைத்திருந்தாலும் அவர்களின் ஆசை தீராது.
விலங்குகளை, பறவைகளை, பொருட்களை… மொத்தத்தில் வெளி உலகை குழந்தைகள் தெரிந்துகொள்ள உதவும் முதல் சாதனம் பொம்மைகளே. அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். இப்போதோ, பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொம்மைகள்தான் குழந்தைகள் கைகளில் தவழ்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளில் அதிக அளவில் காரீயம் உள்ளிட்ட நச்சுக்கள் கலந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்
பொம்மைகளில் எது பாதுகாப்பானது, எது ஆபத்தானது எனக் கண்டறிந்து வாங்குவது அவசியம். விலை மலிவானது, எளிதில் கிடைக்கக்கூடியது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எது குழந்தைக்கு அவசியம் என அறிந்து, வாங்கிக் கொடுக்க வேண்டும்.
பிரபல கார்ட்டூன் வடிவங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பைகளில், தாலேட்ஸ் (Phthalates) என்ற ரசாயனம் 3,000 பி.பி.எம் என்ற அளவுக்குக் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த  பிளாஸ்டிக் பொருளாக இருந்தாலும் அதில், 1,000 பி.பி.எம் வரைதான் தாலேட்ஸ் கலந்திருக்க அனுமதி உள்ளது. ‘பாக்பேக்’ எனும் பைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன்களை அச்சிட்டு, அதன் முன் வடிவத்தில் தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் இந்தப் பொம்மையைப் பயன்படுத்தும்போது, வாயில்வைக்க வாய்ப்பு உள்ளது.  எனவே தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்பட்ட பைகளைத் தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள் குளிக்கும் வாட்டர் டப்பில் ரப்பர் வாத்துகளை நீந்தவிடுவது உண்டு. குழந்தைகளைக் குளிக்கவைக்க பெற்றோர் செய்யும் யுக்தி இது. இந்த வாத்து பொம்மையில் 1,400 பி.பி.எம் தாலேட்ஸ் கலக்கப்படுகிறது.
இரும்பை ஈர்க்கும் அல்லது ஒட்டிக்கொள்ளும் காந்தங்களில் (Magnet) செய்யப்பட்ட பொம்மைகளைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. மிகச்சிறிய பொம்மைகளில்கூட இப்போது, காந்தம் இருக்கிறது. இதைக் குழந்தைகள் விழுங்கிவிட வாய்ப்புள்ளது. காந்தம் மற்றும் காந்தத்தால் தயாரிக்கப்படும் பொம்மைகளை 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குத் தரலாம்.
குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் கிளிப்கள், பிரேஸ்லெட், மேலாடைகளில் தகதகவென மினுங்கும் ஜிகினா மற்றும் ஜிமிக்கிகள் பதிக்கப்பட்டு இருக்கும். இவை கை, முகம், ஆடைகளில் ஒட்டி அலர்ஜியை ஏற்படுத்தலாம். தெரியாமல் கண், வாயில் பட்டால், எரிச்சல் உணர்வும் ஏற்படும்.
ஃபர் பொம்மைகளில்(FUR TOYS) தூசு அதிகமாகப் படிய வாய்ப்பு இருக்கிறது. இதை வைத்து குழந்தைகள் விளையாடும்போது தும்மல், வீசிங் அலர்ஜி, சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். ஃபர் பொம்மை தூசுகளை ஈர்த்து வைத்துக்கொள்ளும். அதைத் தொடும்போதும் உதறும்போதும் தும்மல் மூலமாக நுரையீரல் வரை தூசுகள் செல்லும்.
குழந்தைகள், ஃபர் பொம்மைகளை (FUR TOYS)வாயில் கடித்து, பஞ்சு போன்ற அதன் நூலைச் சப்பி விழுங்கவும்கூடும். இது, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். சாலையோரக் கடைகளில் வாங்கும் ஃபர் பொம்மைகள், தரமானவையாக இருக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நாளடைவில் பஞ்சு போன்ற முடிகள் வீடு முழுதும் பரவி, உணவு, நீர் போன்றவற்றிலும் கலந்து, பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதாலும் இதே பிரச்னை வரும். விலங்குகளின் முடி, மூக்கு, வாய் மூலமாக உடலுக்குள் சென்று ஆஸ்துமா, வீசிங், நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.
கிரயான், கலர் பெயின்டிங்சீனாவில் தயாரிக்கப்படும் கிரயானில் ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) எனும் பிளாஸ்டிக் கெமிக்கல் உள்ளது. இது, காற்றில் பரவி குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பானப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்தும்போது, நுரையீரல் வீக்கம், புற்றுநோய் வரலாம் என்கிறது அமெரிக்க  சுகாதார நிறுவனம் (U.S. Occupational Safety and Health Administration (OSHA)).
தொடர்ந்து, பிளாஸ்டிக் பொம்மைகளை வாயில் வைப்பதால், அதிலிருக்கும் பெயின்ட் உரிந்து, வாய்க்குள் செல்லலாம். இந்தப் பழக்கத்தைக் குழந்தை தொடர்ந்து செய்தால், ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உள் உறுப்புகள் பாதிக்கக்கூடும்.
பொம்மைகளை அருகில் வைத்து விளையாடலாம். ஆனால், வாயில் வைக்கக் கூடாது என்பதைக் குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது நல்லது.
பொம்மைகளை வாங்கும்போது பிராண்டட் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம். CE Mark, BS EN 71, Lion Mark போன்ற முத்திரைகள் கொண்ட வெளிநாட்டு பொம்மைகள் ஓரளவுக்குப் பாதுகாப்பானவை.
ஃபர் பொம்மைகளின் நூல் இழைகள் உதிர்கின்றனவா என உதறிப்பார்த்து வாங்கலாம். நூல் உதிராத பொம்மைகள் என்றாலும்,  சாலை ஓரங்களில் வாங்குவதைவிட பொம்மைக் கடையில் வாங்குவது பாதுகாப்பானது. ஃபர் பொம்மையைத் தவிர்த்து, நூலிழைகள் இல்லாத, சாஃப்ட் துணியில் வரும் பொம்மைகளை வாங்கலாம். பிளாஸ்டிக் பொம்மைகளில் 2, 3 அல்லது `V’, 7  எனப் பொறிக்கப்பட்டிருக்கும் எண்கள் இருந்தால், அவற்றை அவசியம் தவிர்க்கவும். எண் 1, 2, 4, 5 எண்கள்கொண்ட பொம்மைகளை வாங்கலாம். எடை இல்லாத மரபொம்மைகள் வாங்கலாம். இதில், செதில்கள் இருக்காது. புரியாத மொழியில் லேபிள் இருப்பவற்றைத் தவிர்க்கலாம்.
இரும்பு ஸ்பிரிங், எலாஸ்டிக் ரப்பர் பாண்டு, எலாஸ்டிக் கயிறு கட்டிய பொம்மைகளைக் குழந்தைகள் இழுத்து விளையாடும்போது, கண், கை, கால்களில் சுளீரென அடிபட நேரலாம்.
குட்டி பொம்மைகள், அழகான வடிவில் இருக்கும் மெழுகு பொம்மைகளைக் குழந்தைகள் விழுங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கூர்மையான முனைகள்கொண்ட பொம்மைகளால் ஆபத்து ஏற்படலாம். கண் போன்ற முக்கிய உறுப்புகள் பாதித்தால், குழந்தையின் எதிர்காலமும் மோசமாகும்.
பாலிஸ்டர், நைலான் துணிகளால் ஆன கைவினைப் பொம்மைகளைக் குழந்தைகள் வாயில்வைத்துச் சப்பினால், அந்த சாயங்கள் வயிற்றுக்குள் சென்றுவிடும்.
காரீயம், பாதரசம், காட்மியம் போன்ற உலோகங்கள் கலந்த பொம்மைகளை முற்றிலும் தவிருங்கள்.
பிஸ்பீனால் ஏ (Bisphenol A), வினைல் குளோரைடு (Vinyl chloride), டையாக்சின் (Dioxin), மற்றும் தாலேட்ஸ் (Phthalates) கலந்த பிளாஸ்டிக் பொம்மைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
வயதுக்கேற்ற பொம்மைகள்:
0-3 மாதங்கள் – கண்களால் மட்டுமே பார்க்கும் வயது. அடர் நிறங்கள்கொண்ட திரைச்சீலைகள், ஊஞ்சலில் கட்டிவிடும் பொம்மைகள், பெரியவர் கை வைத்து அழுத்திச் சத்தம் ஏற்படுத்தும் பொம்மைகளைத் தரலாம்.
3-6 மாதங்கள் – தலைகுப்புற விழுந்து, நகர்ந்து செல்வதால், மென்மையான பொம்மைகள், நகர்ந்து செல்லும் பெரிய பொம்மைகளைத் தரலாம். பல் மருத்துவர் ஆலோசனையுடன், பற்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘டூத் டாய்ஸ்’ வாங்கித் தரலாம்.
6-9 மாதங்கள் – உட்கார்ந்து, நிற்கும் குழந்தைகளுக்கு, நடைவண்டி, பெரிய பந்து ஆகியவற்றைத் தரலாம்.
9-12 மாதங்கள் – நடப்பது, ஒடுவது எனச் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, கியூப்ஸ் விளையாட்டுப் பொருட்கள், பெரிய படங்கள் பதிந்த கதைப் புத்தங்கள், எடையில்லாத, அடுக்கிவைக்கும் பொம்மைகளைத் தரலாம்.
12- 18 மாதங்கள் – வண்ணம் தீட்டும் புத்தகம், படங்கள் இருக்கும் புத்தகங்களைக் கொடுக்கலாம். கலர் பென்சிலைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கற்றுத்தருவது நல்லது.
பிராண்டட் பொம்மைகள் மற்றும் பெயின்ட் உதிராத பொம்மைகளைக் கொடுக்கலாம்.
சாஃப்ட் டாய்ஸ்களைத் தரலாம். பி.வி.சி இல்லாத பொம்மைகள் ஓரளவுக்குப் பாதுகாப்பானவை.
நூலிழைகளால் செய்யப்படும் பொம்மைகள், எளிதில் தீப்பிடிக்கக்கூடியவை. இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
பெயின்ட் அடித்த பொம்மைகளாக இருந்தால், அது காரீயம் (Lead) கலக்காத பொம்மையாக இருக்க வேண்டும்.
எடை குறைவான பொம்மைகளைத் தேர்ந்து எடுக்கலாம்.
வண்ணம் தீட்டும் விளையாட்டுப் பொருட்களில், கெமிக்கல்கள் கலந்திருக்கக் கூடாது.
பெரிய பொம்மைகளை வாங்கித் தரலாம். இதனால், வாயில் வைத்து விழுங்குவது தடுக்கப்படும்.
குட்டிப் பந்து, கோலி போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. அல்லது இந்தப் பொருட்களைப் பெற்றோர் பார்வையில் விளையாட அனுமதிக்கலாம்.
பேட்டரி பொருத்தப்பட்ட பொம்மைகள் என்றால், பேட்டரியைக் கழற்றாதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும்.
மர பொம்மைகளில் செதில் செதிலாக வந்தால் அவற்றைத் தரவே கூடாது. நன்கு மோல்டு செய்யப்பட்ட பொம்மைகளைத் தரலாம்.
மெட்டல் பொம்மையில் துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இயன்றவரை மெட்டல் பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
கார், பைக் போன்ற பொம்மைகளைவிட பந்து, மனித வடிவில் உள்ள பொம்மைகளை வாங்கித் தரலாம்.

* எப்போது புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிக்கும் போது சில மணி நேரங்களிலேயே எனக்கு மிகவும் பசிக்கிறது, முதலில் சாப்பாடு பின்பு தான் படிப்பு என்று தட்டி கழிப்பது.
* படிக்கும் போது எப்பொழும் தன் பக்கத்தில் தான் இருக்க வேண்டும் அப்படி இப்படி அசைந்தால் போதும் படிப்பை நிறுத்தி விடுவது.






நீங்கள் பொக்கிஷமாக நினைத்து உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள:

* ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர்ந்து படிப்பதே இல்லை.
* ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்துக் கொள்வது.
உங்கள் குழந்தைக்கு உண்மையான பிரச்சனை என்னவென்று கண்டறியுங்கள், அவர்கள் எதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். என்ன செய்தால் குழந்தையை திசை திருப்ப முடியும் என்று கண்டறிந்தாலே போதும் அவர்களை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம்.
சில பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் படி படி.. என்று வற்புறுத்துவார்கள், இவ்வாறு திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை கூறும் பொழுது வெறுப்பு வர ஆரம்பித்து விடும். படிப்பு முடித்ததும் இதர பயிற்சிகளை கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி விடுகின்றனர்.
எந்த ஒரு குழந்தையும் படிக்க ஆரம்பிக்கும் போதே நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும். சில குழந்தைகள் விரைவில் படித்தும் விடும், சிலர் அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். இது நாளடைவில் சரியாகி விடும். பெற்றோர்கள் படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் குழந்தைகளின் விருப்பத்திற்கு இணங்கி நடக்கலாம்.
குழந்தைகள் படிப்பை தவிர அதிக ஆர்வம் செலுத்துவது விளையாட்டுகளில் தான். படிக்க வைக்கும் நேரத்தில் படிக்க வைப்பதும் விளையாடும் நேரத்தில் விளையாட அனுமதிக்கலாம்
நவீன உலகில் குழந்தைகள் கணினி விளையாட்டை அதிகம் விரும்பி விளையாடுகின்றனர். குழந்தைகள் மூளையை உபயோகப்படுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். இதனால் குழந்தையின் மூளை சுறு சுறுப்பாகவும், சுயமாக சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.
பெற்றோர்கள் கணினி விளையாட்டுகளை தவிர வினா விடை, குறுக்கெழுத்து போட்டி, கணிதத்தில் புதிர் போட்டி போன்ற விளையாட்டுகளை கற்று கொடுக்கலாம். இவ்வாறு குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடியுங்கள். பிறகு உங்கள் குழந்தை தான் சிறந்த குழந்தையாக திகழும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு  நுட்பமான வாழ்வியல் கலையாகும்!
அதைத் தன்மையாகக் கையாண்டு தலைமுறையை மேம்படுத்துவோம்! 

No comments:

Post a Comment

Ads Inside Post