Tuesday 31 May 2016

நாஸ்கா கோடுகள் ( NAZCA LINES) - (Unrevealed mystery )


நாஸ்கா கோடுகள் ( NAZCA LINES)



 இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும்அதிசையங்களையும் 
 தன்னகத்தேஅடக்கியது. இம்மர்மங்களின் முடிச்சுகள்அவிழ்க்கப்படும் 
 தருணம் அவை மானுடவாழ்வியலுக்கான புதியதொருதிறவுக்கொலாக அமைந்துள்ளது.பலகோடி நட்சத்திரமண்டலங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கிய இந்தஅண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே 
 உயிர்கள் தோன்றியது முதல்அவ்வுயிர்கள் அண்டத்தை ஆளும் 
வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது.  
இதில் இன்றும் மானுட அறிவிற்கு சவால் விடும் அதிசயங்களையும் மர்மங்களையும்இயற்க்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நாஸ்காகோடுகள்.






நவீன கலாச்சாரத்தில் மிகப் பெரிய கட்டடங்கள், பாரிய மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள் என எதை உருவாக்க முடிந்தாலும் அது பண்டைய சில கலாச்சார உருவாக்கங்களுக்கு ஈடாகுமா என்பது ஐயமே. எடுத்துகாட்டாக எகிப்து நாட்டு பிரமிடுகள், கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ், கிரேக்க நாட்டு கால்வாய்ப் பாலங்கள் என பல உருவாக்கங்களை சொல்லலாம். பண்டைய உருவாக்கங்கள் சிலவற்றிற்கான நோக்கம் இன்றளவும் புதிராகவே இருக்கின்றது.
நாஸ்கா கோடுகள் 1927 விமானத்தில் இருந்து தற்செயலாககண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை. இருந்தும் இந்தக் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன.
 எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின்விமானத்தளம் என்று கூறியது அறிவியலாளர்களால்ஏற்கப்படவில்லை 
அறிவியலாளர்கள் இவற்றை நாஸ்கா கலாசார மக்களால் கி.பி.400 மற்றும் கி.பி.600 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் இவற்றைஉருவாக்கியிருக்கலாம் என்று கருதுகின்றனர். பலநூறுவிலங்கு,பறவை,தாவர இனங்களின் உருவங்களை வெளிப்படுத்தும்
 இந்த நாஸ்கா மனைகொடுகளை ஒரு சாரர் இவை விவசாயிகள் உருவாகியவை என்றும்,          மற்றொருதரப்பினர் இவை வேற்றுலகவாசிகளால் ஏற்ப்படுத்தப்பட்டவை என்று
கூறிவருகின்றனர். இவற்றில் எது உண்மை என்று இன்றுவரைநிரூபிக்கப்படவில்லை. இருந்தும் விஞ்ஞானம் வளராதஅக்காலக்கட்டத்தில் இவ்வளவு பிரமாண்டமான கோடுகளை அப்பெரும்நிலப்பரப்பில் எவ்வாறு நேர்த்தியாகவும், துல்லியமாகவும் வரையப்பட்டது? யாரால்வரையப்பட்டது? அவற்றை வரைய வேண்டிய அவசியமென்ன? அவை நமக்கு உணர்த்துபவை யாவை?
இம்முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. விஞ்ஞானம் நாஸ்கா கோடுகளுடன் இன்றும் போரடிக்கொண்டிருகிறது.



தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் அமைந்துள்ள நசுகா கோடுகள் எதற்காக உருவாக்கப்பெற்றன என்பது பல ஆண்டுகளாக அழியாத கேள்விக்குறியாகவே இருக்கிறது
உலகப் புகழ் பெற்ற நசுகா கோடுகள் ஏறத்தாழ 80கிமீ தூரத்திற்கு பல்வேறு உருவங்களாகவும், இணைக்கப்பட்ட கோடுகளாகவும் வரையப்பட்டிருக்கின்றன. நாய், குரங்கு,  பறவை, விண்வெளி வீரன் இன்னபிற உருவங்களும் 4மீ முதல் 200மீ வரை வெவ்வேறு அளவு வேறுபாடுகளுடன் வரையப்பெற்றுள்ளன. இக்கோடுகள் கி.பி 400 -ல் இருந்து கி.பி. 650 வரை அங்கு வாழ்ந்த நசுகா இனத்தவரால் வரையப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரியப் பெரிய உருவங்களாதலால் இதை வானூர்திகளில் இருந்தும், அருகே உள்ள மலைச் சிகரங்களில் இருந்தும் காண முடியுமே தவிர, சம நிலத்திலிருந்து பெரும்பாலான உருவங்களை முழுவதும் காண சாத்தியமில்லை.
நசுகா கோடுகள் எப்படி (எந்தெந்த கருவிகளைப் பயன்படுத்தி) வரையப்பட்டன என்பது இன்றளவும் மர்மமாகவே இருந்தாலும், நிலத்தை 15 முதல் 20 செமீ வரை தோண்டி இக்கோடுகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன என்பது உறுதி.
இக்கோடுகள் எதற்காக உருவாக்கப்பட்டன?
நசுகா கோடுகள் வரையப்பட்டதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்று மானுடவியலாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் போன்றோர் விவாதித்தபடியே உள்ளனர். வானுலக மாற்றங்கள், அதாவது கதிரவன் வடக்கு அல்லது தெற்கு நோக்கி நகரும் காலங்களை கணக்கிடவும், விண்மீன்களின் நகர்வுகளை கணிக்கவும் இக்கோடுகள் வரையப்பட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கொடுகளும் உருவங்களும் அங்கு வாழ்ந்த இனத்தவரின் மரபு அல்லது சடங்கு முறைகளை குறிக்கலாம் எனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கு சில மனிதர்கள் வாழ்கின்றனர் அவர்களுக்கு நீர் (மழை, பாலைவனம் ஆதலால்) அளித்தால் விவசாயம் செய்ய உதவியாக இருக்கும் என்று வானத்தில் இருக்கும் கடவுளரிடம் தெரியபடுத்த இவ்வுருவங்கள் வரையப்பட்டிருக்கலாம் என்று சிலர் நம்புகின்றனர்.
இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்.
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம்.
·         நேர் கோடுகள்
·         கேத்திர கணித (Geometry) முறையிலான வடிவங்கள்
·         விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள்.
இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால்கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன.




நசுகா இனத்தவர் எவரும் தற்போது இல்லாத காரணத்தினால் இதற்கான விடையை ஆராய்ந்து பெறுவது என்பது கடினமான விடயம் என்பதே உண்மை. அவை திசைக்காட்டிகளாக இருக்கலாம், வழி காட்டிகளாக இருக்கலாம், வெறும் குறியீடுகளாக இருக்கலாம், வழிபாட்டு உருவங்களாக இருக்கலாம், வானுலகை கணிக்க உருவாக்கப்பெற்றவையாக இருக்கலாம் போன்ற பல ‘இருக்கலாம்’ இருக்கலாம். ஆனால் இம்மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா என்பது இதுவரை விடையற்ற கேள்வியே.

இம்மகத்தான நிர்மாணங்களின் பண்டைய கலாச்சார நுட்பங்களையும் அதன் நோக்கங்களையும் தற்போதைய நவீன கலாச்சார நிர்மாணங்களுடன் ஒப்பிட்டால் நவீன கலாச்சாரத்தின் குறைகள் வெளிச்சத்திற்கு வருமேயன்றி பண்டைய கலாச்சாரமல்ல..
ka6thikkn

No comments:

Post a Comment

Ads Inside Post